வாக்குப்பதிவை கண்காணிக்க வாக்குச்சாவடிகளில் வெப்​-காஸ்டிங் அறிமுகம்

புதுடெல்லி: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவைக் கண்காணிக்க வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் (இணையவழி மூலமாக நேரலை) முறையை அறிமுகம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க பல்வேறு முறைகளை தேர்தல் ஆணையம் கையாண்டு வருகிறது. தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை வீடியோ செய்தல் போன்ற பல்வேறு நடைமுறை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் இணையவழி நேரலை எனப்படும் வெப்காஸ்டிங் மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குவாவடிகள் உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் இந்த வெப்காஸ்டிங் முறையைக் கடைப்பிடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான திட்ட அறிக்கையை தேர்தல் ஆணையக் குழு, அனைத்து மாநில, யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் குறைந்தது 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப்காஸ்டிங் முறை கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

இதன்மூலம் மாவட்ட அளவில் தேர்தல் அதிகாரிகள், கண்காணிப்பு மையத்தில் அமர்ந்தவாஙறு வாக்குப்பதிவை கண்காணிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.