Sai Sudharsan: இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதற்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அறிவித்த நிலையில், இதுவரை இந்திய அணி அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் இடத்தை நிறப்புவதற்கு சரியான வீரரை இந்தியா தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங் வரிசையின் மீது பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது. குறிப்பாக சிறப்பாக விளையாடி வரும் சாய் சுதர்சன் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக இறங்குவது உறுதியாக இருக்கிறது. நான்காவது இடத்தில் சுப்மன் கில்லும் ஐந்தாம் இடத்தில் ரிஷப் பண்ட்டும் இறங்குவது உறுதியாக இருக்கிறது. ஆனால் மூன்றாவது வரிசை மற்றும் ஆறாம் வரிசைக்கான வீரர்கள் யார் என்பதை இந்திய அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
மூன்றாவது வரிசையில் அபிமன்யு ஈஸ்வரன் அல்லது சாய் சுதர்சன் இருவரில் யாரை இறக்குவது என்ற கேள்வி உள்ளது. அதேபோல் 6வது வரிசையில் கருண் நாயர் அல்லது துருவ் ஜூரல் ஆகிய இருவரில் யாரை களமிறக்குவது என்ற கேள்வி உள்ளது. அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் மற்றும் துருவ் ஜூரன் ஆகியோர் பயிற்சி போட்டிகளில் விளையாடி ரன்களை குவித்திருப்பதால், அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
இதில், கருண் நாயர் மூன்று அல்லது நான்காவது வரிசையில் விளையாட கூடிய பேட்ஸ்மேன். எனவே அவரை 6வது வரிசையில் இறக்குவதில் சிக்கல் உள்ளது. அதேபோல் அபிமன்யூவை இறக்கினால் அது ஒன் டவுன் அல்லது தொடக்க வீரராக தான் இறக்க முடியும். இதேபோல் தான் சாய் சுதர்சனின் நிலைமையும். எனவே பிளே லெவனை சேட் செய்வது இந்தியாவிற்கு சற்று கடினமான விஷயமாகவே இருக்கும்.
மேலும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: எப்போது, எங்கே, எதில் பார்ப்பது? முழு விவரம்!
மேலும் படிங்க: ஐபிஎல்-க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு!