ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழப்பு; 2,000 பேர் படுகாயம்: 20 அணு சக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிந்தன

டெஹ்ரான்: இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளன.

கடந்த 13-ம் தேதி அதி​காலை ஈரான் மீது இஸ்​ரேல் விமானப் படை திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. இரு நாடு​களிடையே 7-வது நாளாக நேற்​றும் போர் நீடித்​தது. கடந்த 7 நாட்​களில் ஈரான் தலைநகர் டெஹ்​ரான் உட்பட அந்த நாட்​டின் 1,100 இடங்​கள் மீது இஸ்​ரேல் போர் விமானங்​கள், ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்தி உள்​ளன. குறிப்​பாக ஈரானின் அணு சக்தி தளங்​கள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், எண்​ணெய் வயல்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்​கள், 16 எண்​ணெய் வயல்​கள் அழிக்​கப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.
ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு கீழே சுமார் 90 மீட்​டர் ஆழத்​தில் அந்த நாட்​டின் மிக முக்​கிய அணுசக்தி தளம் செயல்​படு​கிறது. இந்த தளம் மீது இஸ்​ரேல்விமானப் படை தாக்​குதல் நடத்​தி​யது. ஆனால் அதனை அழிக்க முடிய​வில்​லை.

அமெரிக்க ராணுவத்​தால் மட்​டுமே பூமியைதுளைத்து போர்டோ அணுசக்தி தளத்தை அழிக்க முடி​யும் என்று கூறப்​படு​கிறது. இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரான் ராணுவத்​தின் 11 மூத்த தளப​தி​கள் கொல்​லப்​பட்டு உள்​ளனர். ஈரான் முழு​வதும் 154 ராணுவ வீரர்​கள் உட்பட 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். தலைநகர் டெஹ்​ரான் சுடு​கா​டாக மாறி​யிருக்​கிறது. பெரும்​பாலான மக்​கள் தலைநகரை விட்டு வெளி​யேறி பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சமடைந்து உள்​ளனர்.

டெஹ்​ரானில் உள்ள ராணுவ தலை​மையகங்​கள், அணு சக்தி தளங்​கள் முழு​மை​யாக அழிக்​கப்​பட்டு உள்​ளன. அங்​குள்ள எண்​ணெய் வயல்​கள் தீப்​பிடித்து எரி​கின்​றன. இஸ்​ரேல் போர் விமானங்​கள், ட்ரோன்​கள், ஏவு​கணை​கள் பெரும்​பாலும் தலைநகர் டெஹ்​ரானை குறி​வைத்தே தாக்​குதலை நடத்தி வரு​கின்​றன. ராணுவ ரீதி​யிலும் பொருளா​தா​ர ரீ​தி​யிலும் ஈரானுக்கு மிகப்​பெரிய இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது.

இஸ்​ரேலில் 24 பேர் உயி​ரிழப்பு: ஈரான் ராணுவ தரப்​பில் இஸ்​ரேலை குறி​வைத்து இது​வரை 400 ஏவு​கணை​கள் வீசப்​பட்டு உள்​ளன. மேலும் 1,000 ட்ரோன்​கள் மூல​மும் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு உள்​ளன. இஸ்​ரேலின் டெல் அவிவ் உட்பட பல்​வேறு பகு​தி​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. கடந்த 7 நாட்​களில் இஸ்​ரேல் முழு​வதும் 24பேர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் 200-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​துள்​ளனர். இஸ்​ரேலின் அனைத்து வீடு​களி​லும் பங்​கர் ரூம் என்ற பதுங்கு அறை​கள் உள்​ளன. ஈரான் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் இஸ்​ரேல் எல்​லைக்​குள் நுழை​யும்​போது அபாய ஒலி எழுப்​பப்​படு​கிறது. அப்​போது பொது​மக்​கள் பதுங்கு அறை​களில் தஞ்​சமடைகின்​றனர். இதனால் இஸ்​ரேலில் உயி​ரிழப்பு குறை​வாக இருக்​கிறது. அந்த நாட்​டின் வான் பாது​காப்​பும் வலு​வாக இருப்​ப​தால் பாதிப்​பு​கள் குறைவாக உள்​ளன.

எனினும் டெல் அவிவ் உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில் உள்ள ராணுவ முகாம்​கள், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் ஈரான் ராணுவ ஏவு​கணை தாக்​குதல்​களில் மிகக் கடுமை​யாக சேதமடைந்து உள்​ளன. இஸ்​ரேலின் மொசாட் உளவு அமைப்​பின் தலைமை அலு​வல​கம் தகர்க்​கப்​பட்டு உள்​ளது. மேலும் ஈரானுக்கு ஆதர​வாக ஏமனின் ஹவுத்தி தீவிர​வா​தி​கள், லெப​னானின் ஹிஸ்​புல்லா தீவிர​வா​தி​கள், காசா​வின் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் இஸ்​ரேலை குறி​வைத்து தொடர்ச்​சி​யாக ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்தி வரு​கின்​றனர். இதனால் இஸ்​ரேல் பலமுனை தாக்​குதல்​களை எதிர்​கொண்​டிருக்​கிறது. எனினும்​ ஈரானை ஒப்​பிடும்​போது இஸ்​ரேலில்​ உயி​ரிழப்​பு, பொருட்​சேதம்​ மிக​வும்​ குறை​வாக உள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.