காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழப்பு

காசா: இஸ்​ரேல் மீது கடந்த 2023 அக்​டோபரில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலை தொடர்ந்​து, காசா​வில் அந்த அமைப்​பினர் மீது இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கியது. தற்​போது ஈரானுடன் இஸ்​ரேல் போரிட்டு வரும் நிலை​யிலும் காசா​வில் தாக்​குதலை தொடர்​கிறது.

இந்​நிலை​யில் மத்​திய காசா​வின் சலா அல்​-​தின் சாலை​யில் உணவுப் பொருளுக்​காக காத்​திருந்த நூற்​றுக்​கணக்​கான பாலஸ்​தீனர்​கள் மீது இஸ்​ரேலிப் படைகளும் டிரோன்​களும் நேற்று காலை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

இதுகுறித்து நுசேரத் அகதி​கள் முகாமில் அமைந்​துள்ள அவ்தா மருத்​து​வ​மனை அதி​காரி​கள் கூறும்​போது, “உணவுப் பொருள் லாரி​களை பாலஸ்​தீனர்​கள் நெருங்​கிச் சென்​ற​போது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இந்த தாக்​குதலில் 25 பேர் இறந்​தனர். 146 பேர் காயம் அடைந்​தனர். இவர்​களில் 62 பேர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் உள்​ளனர். இவர்​கள் காசா​வில் உள்ள பிற மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்” என்றனர்.
ஆனால் சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் தங்​களை நோக்கி வந்​தவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக இஸ்​ரேலிய பாது​காப்​பு படைகள்​ கூறி வருகின்​றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.