Guru Mithreshiva: "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் புத்தகத்தில் உள்ள அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் இரத்தின சுருக்கமாக அவருக்கே உரிய பாணியில் எளிமையாக விளக்கினார்.

குழந்தைகள் மேதை என்ற முதல் அத்தியாயத்தை பற்றி குறிப்பிடும் போது புகழ்பெற்ற அமெரிக்க பெண்மணி ஹெலன் கெல்லர் அவர்களை ஒப்புமைப்படுத்தி பேசினார்.

பார்க்க, பேச, கேட்க முடியாத நிலையில் பிறந்த ஹெலன் கெல்லர் பிற்காலத்தில் அமெரிக்காவின் பிரபலமான பெண்மணியாக மாறிய கதையைக் கூறி அவரின் பிறந்த நாளான இன்று இந்த புத்தகம் குறித்து பேசுவது சிறப்பு என்றார்.

‘ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சி என்பது உடனடியாக தெரிந்து கொள்வது அல்ல… பூர்வ ஜென்மத்தில் முன்னோர்கள் சேகரித்த அறிவின் முதிர்ச்சி’ என்று தொடர்புபடுத்தி பேசிய பட்டுக்கோட்டை பிரபாகர், கர்மா கர்மவினை ஆகியவை ஆன்மீகத்தில் கையாளப்படும் இரண்டு வார்த்தைகள் என்று மேற்கோள் காட்டி நூலில் உள்ள இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? என்ற கேள்வியையும் அதற்குண்டான பதிலையும் தனக்கே உரிய பாணியில் தொடர்புபடுத்தி பேசினார்.

குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவா

பொதுவாக இந்த புத்தகம் ஒரு தோழன் மீது கை போட்டு பேசுவதை போன்று எளிமையாக இருப்பதாக கூறிய பிரபாகர், நம்பிக்கைக்கும் உணர்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டால் தேடல் சரியான பாதையில் செல்லும் என்று கூறினார்.

அவரது பேச்சைக் கேட்க…

Guru Mithreshiva நிகழ்ச்சி

விகடன் பிரசுரம் வெளீயீடுகளான இந்தப் புத்தகங்களைப் பொருளாதார நிபுணர் நாகப்பன் , எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் வெளியிட சி.கே .குமரவேல், ஜோதிடர் கே.பி . வித்யாதரன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பெற்றுகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.