Paranthu Po: “ராம், மிர்ச்சி சிவாவை வைத்து படம் எடுப்பது..'' -வெற்றிமாறன் பேசியது என்ன?

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’.

இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், “க்ளாஸில் இருக்கும் மக்கு ஸ்டூடன்ட் மாதிரி உணருகிறேன். எல்லோரும் படத்தைப் பார்த்துவிட்டு வந்து பேசுகிறீர்கள். ஆனால் நான் படம் பார்க்கவில்லை.

பறந்து போ
பறந்து போ

அதனால் எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருப்பினும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

ராம் தொடர்ந்து படங்கள் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார். ரிலீஸ் தள்ளிப்போவதுதான் இந்த இடைவெளிக்கான காரணம். ராம் தொடர்ந்து வேலைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். இவர் ஒரு நல்ல கதை ஆசிரியர்.

ராம், மிர்ச்சி சிவாவை வைத்து படம் எடுக்கிறார் என்பது ஆச்சரியம் இல்லை. எப்படியும் அது ராமின் படமாகத்தான் இருக்கும்.

என்னோடே பையன் என்னவெல்லாம் செய்தானோ? அதையெல்லாம் வைத்து படமாக எடுக்கப்போகிறேன் என்று சொன்னார். ‘தங்க மீன்கள்’ என்னுடைய மகளுக்கு, ‘பறந்து போ’ என்னுடைய மகனுக்கு என்று சொன்னார்.

வெற்றிமாறன், பாலா, ராம்,

இது ஒரு நகைச்சுவை படமாகக் கண்டிப்பாக இருக்கும். ராமின் இந்தப் படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழ் சினிமாவில் இயக்குநராக ஆசைப்படும் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு  ஆசிரியர்.

இந்த மேடையில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த நான், பாலா சார், ராம் மூன்று பேரும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.  

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.