PM Kisan mobile number update : பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை விரைவில் வெளியாக இருக்கிறது. நாடு முழுவதும் இதற்கான பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இம்முறை வேளாண் அடுக்க எண் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்கும் விவசாயிகள் வேளாண் அடுக்க எண்ணுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை அலுவலகத்துக்கு விவசாயிகள் ஆவணங்களுடன் நேரில் சென்றாலே அங்கிருக்கும் அரசு ஊழியர்கள் வழிகாட்டுவார்கள். அதேநேரத்தில் பிஎம் கிசான் தொகை தொடர்பான அப்டேட்டுகளை உங்களின் மொபைலுக்கு எஸ்எம்ஸ் வழியாக வரவேண்டும் என்றால், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை கொடுத்திருக்க வேண்டும்.
ஒருவேளை விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்துக்கு ஏற்கனவே கொடுத்த மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்றால் ஆன்லைன், ஆப்லைன் என இரண்டிலும் மாற்றிக் கொள்ளலாம். இப்போது ஆன்லைனில் மாற்றுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பிஎம் கிசான் திட்டத்துக்கு மொபைல் எண் ஏன் முக்கியம்?
SMS அலர்ட்: பி.எம். கிசான் தொகை கணக்கில் வந்ததை உறுதிப்படுத்தும் SMS, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்.
OTP சரிபார்ப்பு: ஆதார் சரிபார்ப்புக்கு மொபைல் எண் தேவை.
புகார் மற்றும் தற்போதைய நிலை: உங்கள் கிசான் விண்ணப்ப நிலையை பார்க்க மொபைல் எண் அவசியம்.
பி.எம். கிசான் போர்ட்டில் மொபைல் எண் புதுப்பிப்பது எப்படி?
ஆன்லைன் முறை:
* அதிகாரப்பூர்வ வலைத்தளம் – https://pmkisan.gov.in -ல் செல்லவும்.
* “Update Mobile Number” (மொபைல் எண் புதுப்பிக்க) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* உங்கள் பதிவு எண் (Registration No) அல்லது ஆதார் எண்ணை உள்ளிடவும்.
* கேப்சா கோட் (Captcha) அடித்து, “Search” செய்யவும்.
* உங்கள் விவரங்கள் தெரிந்தவுடன், புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு “Submit” செய்யவும்.
* OTP உறுதிப்படுத்தல்: புதிய எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிடவும்.
ஆஃப்லைன் முறை:
உங்கள் பகுதியிலுள்ள காமன் சர்வீஸ் சென்டர் (CSC) அல்லது விவசாயத் துறை அலுவலகத்தில் ஆதார் அட்டை, பி.எம். கிசான் பதிவு எண், மொபைல் எண் சான்று கொண்டு சென்று புதுப்பிக்கலாம்.
20வது தவணை எப்போது வரும்?
கடைசி தவணை பிப்வரி 19 ஆம் தேதி வந்தது. 20வது மற்றும் அடுத்த தவணை ஜூலை மாதம் வர வாய்ப்புள்ளது. பொதுவாக பிப்ரவரி, ஜூன், அக்டோபர் என ஆண்டுக்கு 3 முறை பிஎம் கிசான் தொகை வழங்கப்படும். இந்த முறை தவணைத் தொகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.