உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபகர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் 15 ஆண்​டு​களாக கதாகாலட்​சேபம் செய்​யும் முகுட்​மணி சிங் யாதவ் மற்​றும் அவரது உதவி​யாளர் சந்த் குமார் யாதவ் தாக்​கப்​பட்​டனர். முகுட்​மணி​யின் தலை​முடியை மொட்​டையடித்த கும்​பலில் 4 இளைஞர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பிராமணர் அல்​லாத முகுட்​மணி கதாகாலட்​சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரி​வித்து தாக்​குதல் நடந்​துள்​ளது. இதை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்​டித்​துள்​ளனர். இதற்​கிடை​யில், முகுட்​மணி மீது பாலியல் மற்​றும் பிராமணர் என பொய் கூறிய​தாக வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இதுகுறித்து உ.பி.​யின் மற்​றொரு பிரபல கதாகாலட்​சேபகர் லவ்லி சாஸ்​திரி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முகுட்​மணி மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் யாதவ சமூகத்​தினர் அனை​வருக்​கும் அவமானம். யாதவர்​களில் கதாகாலட்​சேபகர்​கள் அதி​க​மாகி​விட்​ட​தால், பிராமணர்​களுக்கு கோபம் வரு​கிறது. யாதவர்​களால் வாழ்​நாள் முழு​வதும் வணங்​கப்​பட்​ட​வர்​கள் இப்​போது அவர்​களைத் தாக்​கு​கிறார்​கள்.

வீடு கட்ட பூசை, திருமண சடங்​கு​கள் என அனைத்​துக்​குமே பிராமணர்​களை அழைக்​கிறோம். யாதவர்​களால் தம் சமூக மக்​களின் திரு​மணங்​கள், மத சடங்​கு​களை தானே நடத்த முடி​யாதது ஏன்? யாதவர்​கள் இப்​போதே ஒன்​றுபட வேண்​டும். இவ்​வாறு லவ்லி சாஸ்​திரி கூறி​யுள்​ளார். இந்​நிலை​யில், முகுட்​மணியை சமாஜ்​வாதி கட்சி தலைமை அலு​வல​கத்​துக்கு அழைத்து சால்வை போர்த்தி மரி​யாதை செய்​துள்​ளார் அக்​கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ். அகிலேஷ் கூறுகை​யில், ‘‘சமூக ஆக்​கிரமிப்​பாளர்​கள் இதர சமூகத்​தின் கலைஞர்​களை​யும் விட்​டு​வைப்​ப​தில்​லை. உ.பி.​யில் 90 சதவி​கித சமூகத்​தினர் கொண்ட தலைநகரம் ஒரு சதவி​கிதத்​தினரிடம் சென்​றது எப்​படி?’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

பாஜக தலை​மை​யில் ஆளும் கூட்​டணி உறுப்​பினரும் உ.பி. கேபினட் அமைச்​சரு​மான ஓம் பிர​காஷ் ராஜ்பர் கூறுகை​யில், ‘‘நடந்த சம்​பவத்தை நாமும் கண்​டிக்​கிறோம். முகுட்​மணி 2 ஆதார் அட்​டைகளை வைத்து பிராமணர் என ஏமாற்​றி​னார். பிராமணர்கள், சத்​திரியர்​கள், யாதவர்​கள், விஸ்​வகர்​மா​வினர் என அவர​வருக்​கென பணி​கள் உள்​ளன. இந்த சூழ்​நிலை​யில் மற்ற சமூகங்​களின் பணி​களை அபகரிப்​பது தொடங்கி விட்​டது. பிறப்​பில் இருந்து இறப்​புக்கு பின்​பும் காரி​யங்​கள் செய்து வரும் பிராமணர்​களின் பணி​களை அபகரித்​தால் தகராறு வரத்​தான் செய்​யும். முதலில் அகிலேஷ் தன் குடும்​பத்​தின் சடங்​கு​களுக்கு பிராமணர்​களை அழைப்​பதை நிறுத்​துகிறாரா பார்க்​கலாம்’’ என்று தெரி​வித்​தார்.

இதற்​கிடை​யில், முகுட்​மணி மீதான வழக்கை எட்டாவாஎஸ்​எஸ்பி பிரஜேஷ் வஸ்​த​வா​விடம் இருந்து ஜான்​சி போலீ​ஸா​ரிடம்​ ஒப்​படைக்​க முதல்​வர்​ ஆதித்​ய​நாத்​ உத்​தர​விட்​டுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.