பூரி ஜெகநாதர் கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலை “பெரிய சோகம்” என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஒடிசா அரசை வலியுறுத்தியுள்ளார். ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள உலக புகழ்பெற்ற ஜெகநாதர் கோயில் ஆண்டுத் தேரோட்டம் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. முதல் நாள் தேரோட்ட நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடிய நிலையில் அங்கு பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இருந்தபோதும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிடும் அளவுக்கு சிறப்பாக […]
