பொதுவெளியில் புகைபிடிக்கும் விராட் கோலி? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Virat Kohli Caught Smoking: இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இனி இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார் விராட் கோலி. இருப்பினும் இந்த வெற்றி தொடர்பாக நடைபெற்ற பேரணியில் 11 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து விராட் கோலி பொது வெளியில் எங்கும் காணப்படவில்லை. 

மேலும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய ஆர்சிபி பிளேயர், எப்ஐஆர் பதிவு – முழு விவரம்

புகை பிடித்தாரா விராட் கோலி? 

இந்நிலையில் விராட் கோலி புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. இது பொது வெளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் விராட் கோலி போன்ற அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் நபர் புகைபிடிப்பது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த புகைப்படம் தொடர்பாக சில உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருப்பது விராட் கோலி இல்லை என்றும் பவன் குமார் என்ற நபர் தான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. பவன் குமாரை விராட் கோலி என்று நினைத்தது இது முதல் முறையல்ல. 

Do u think he is really smoking ? @grok pic.twitter.com/KXpVR1PSKZ

— Hiding in X (@DHarsHaDr) June 29, 2025

பார்ப்பதற்கு அவரைப் போலவே இருக்கும் பவன் குமாரை பார்த்து பலரும் விராட் கோலி என்று நினைத்து பேசுவதும், செல்பி எடுப்பதும் போன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பவன் குமார் புகை பிடிக்கும் புகைப்படங்கள் விராட் கோலி தான் என்று தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. விராட் கோலி வந்த பிறகு தான் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு கிரிக்கெட் வீரருக்கு பிட்னஸ் எவ்வளவு முக்கியம் என்பது என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

தனது உணவு கட்டுப்பாட்டில் தீவிரமாக இருக்கும் விராட் கோலி புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து வருகிறார். தினசரி உடற்பயிற்சிகளை மேற்கோள்களில் அதிக கவனம் செலுத்துகிறார் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மிகச்சிறந்த ஃபிட்னஸ் கொண்ட வீரர்களில் விராட் கோலி எப்போதும் முதலிடத்தில் இருப்பார். தற்போது தனது குடும்பத்துடன் ஓய்வில் இருக்கும் விராட் கோலி வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளார்.

மேலும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்.. பின்தங்கிய இந்திய அணி.. எத்தனாவது இடம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.