கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: முக்கிய குற்றவாளி மனோஜித் ஒரு சைக்கோ என குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 24 வயது சட்​டக் கல்​லூரி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்யப்பட்​டுள்ள முக்​கிய குற்​ற​வாளி​யான மேங்​கோ என்ற மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் (சைக்​கோ) பாதிக்கப்பட்​ட​வர் என அவரது முன்​னாள் வகுப்பு தோழர்​களும், ஜூனியர்​களும் குற்​றம்​சாட்​டி​ உள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: சட்​டக்​கல்​லூரி மாணவி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள முக்​கிய குற்​ற​வாளி​யான மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்​ததுடன், பாலியல் வன்​முறை​யில் ஈடு​படும் அளவுக்கு மோச​மான நடத்தை உடைய​வர்.

அதனால்​தான், கடந்த 2021-ம் ஆண்டு கல்​லூரி​யின் திரிண​மூல் பிரி​வில் இருந்து மிஸ்ரா வெளி​யேற்​றப்​பட்​டார். பாலியல் வன்​கொடுமைக்கு ஆளான மாணவி உட்பட எந்த பெண்​களைப் பார்த்​தா​லும் என்னை திரு​மணம் செய்து கொள்​கிறா​யா? என்று பலமுறை தொல்லை கொடுத்​துள்​ளார். மேலும், பெண்​களின் புகைப்​படங்​களை மார்​பிங் செய்து நண்​பர்​களிடையே பரப்​பும் அளவுக்கு மனநோய் உடைய​வர் மிஸ்​ரா. மேலும், பெண்​களை உடல்​ரீ​தி​யாக​வும் அவமானப்​படுத்​து​வார்.

பாலியல் வன்​கொடுமை, தாக்​குதல், மிரட்டி பணம் பறித்​தல் மற்​றும் உடல் ரீதி​யில் துன்​புறுத்​தல் செய்​வ​தாக மிஸ்ரா மீது ஏராளமான புகார்​கள் மாணவி​களின் சார்​பில் தரப்​பட்​டும் அவருக்கு எதி​ராக எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.
கல்​லூரி வளாகத்​துக்​குள் எப்​போது வேண்​டு​மா​னாலும் வந்து போவதுடன், கல்​லூரி வாட்​ஸ்​அப் குழு, தகவல் ஓட்​டத்தை கட்​டுப்​படுத்தும் அளவுக்கு மிஸ்​ரா​வின் செல்​வாக்கு இருந்​தது.

மிஸ்​ரா​வும் அவரது நண்​பர்​களும் பெண்​களுக்கு எதி​ரானவர்​கள் என்​பது நன்கு தெரிந்​திருந்​தும் அவர்​களை பாது​காக்​கும் வேலையில்​தான் கல்​லூரி நிர்​வாகத்​தினர் தொடர்ந்து ஈடு​பட்டு வந்​தனர். இவ்​வாறு முன்​னாள் மற்​றும் ஜூனியர்​ மாணவர்​கள்​ தெரிவித்தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.