ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

சென்னை: ராமதாஸூட​னான சந்​திப்பில் திமுக​வின் சூழ்ச்சி இல்லை என காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்துள்​ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வர் சி.கே.பெரு​மாளின் 80-வது பிறந்​த ​நாளை​யொட்​டி, ‘உள்​ளிக்​கோட்டை டூ செங்​கோட்​டை’, ‘அரசி​யலில் 60 ஆண்​டு​கள்’ ஆகிய நூல்​கள் வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு, பேர​வைத் தலை​வர் அப்​பாவு, திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, இந்​திய கம்​யூனிஸ்ட் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு, தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் தலை​வர்​கள் கே.​வி. தங்​க​பாலு, சு.​திரு​நாவுக்​கரசர் மற்​றும் சி.கே.பெரு​மாள் குடும்​பத்​தினர் கலந்து கொண்​டனர்.

இந்​நிகழ்ச்​சி​யின் முடி​வில் செல்​வப்​பெருந்​தகை செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாமக நிறு​வனர் ராம​தாஸூட​னான சந்​திப்பை அன்​புமணி விமர்​சித்​துள்​ளார். சமூக நீதிக்​காக யாரெல்​லாம் போராடு​கிறார்​களோ அவர்​கள் மீது பாச​மும் மதிப்​பும் எனக்கு உண்​டு.

மரி​யாதை நிமித்​த​மாக சந்​திப்​பை அவர் அரசி​ய​லாக்​கு​வது வேதனை. ராம​தாஸ் மீது உண்​மை​யான அன்பு எங்​களுக்கு இருக்​கிறது. அவர் காங்​கிரஸ் கூட்​ட​ணி​யில் இருந்​திருக்​கிறார். இந்​தக் கூட்​ட​ணி​யில்​தான் அன்​புமணியை மத்​திய அமைச்​ச​ராக்கி இருக்​கிறார். திமுக​வின் சூழ்ச்சி என அன்​புமணி விமர்​சித்​திருப்​பதை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும்.

இண்​டியா கூட்​டணி வலிமை​யாக உள்​ளது. கடந்த தேர்​தலை காட்​டிலும் நடை​பெற உள்ள தேர்​தலில் 200 தொகு​திக்​கும் மேல் வெற்றி பெறு​வோம். அப்​படி இருக்​கும்​போது அரசி​யல் கணக்​குக்​காகவா போய் சந்​திப்​போம். ராம​தாஸின் தமிழ் பாது​காப்பு இயக்​கத்​தில் பலமுறை போராட்​டங்​களை நடத்தி கைதாகி இருக்​கிறோம். இதெல்​லாம் அன்​புமணிக்கு தெரிய வாய்ப்​பில்​லை. அப்​போது அவர் படித்​துக் கொண்​டிருப்​பார். ராம​தாஸ் உடனான சந்​திப்​பில் அரசி​யல் இல்​லை.

அன்​புமணி மிக​வும் நல்​ல​வர். அவர் மதவாத சக்​தி​யுடன் சேர்ந்​திருப்​ப​தால் அப்​படி​தான் பேசு​வார். கூட்​ட​ணி​யில் எந்​தக் கட்​சியை சேர்க்க வேண்​டும் என முதல்​வர் ஸ்டா​லின் முடி​வெடுப்​பார். விசிக​வும் பாமக​வும் 2011 தேர்​தலில் ஒரே கூட்​ட​ணி​யில் இருந்​தார்​கள். அதன்​பிறகு கடலூர், விழுப்​புரம் பகு​தி​யில் இரு கட்​சிகளுக்கு இடையி​லான மோதல் குறைந்​திருக்​கிறது. மீண்​டும் ஒரே கூட்​ட​ணி​யில் வரு​வ​தில் எந்த பிரச்​சினை​யும் இல்​லை. இவ்​வாறு தெரி​வித்​தார்.

கூட்​ட​ணிக்கு அச்​சா​ர​மா? – 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் யாருடன் கூட்​டணி என தேமு​திக அறிவிக்​காத நிலை​யில் காங்​கிரஸ், திமுக நிர்​வாகி​கள் பங்​கேற்ற நிகழ்ச்​சி​யில் கே.எல்​.சுதீஷ் பங்​கேற்​றதும், நிகழ்ச்​சி​யில் பேசும்​போது எனது குடும்​ப​மும், கேப்​டன் குடும்​ப​மும் தொடக்​கத்​தில் காங்​கிரஸ் குடும்​பம்​தான் என பேசி​யிருப்​பதும், அரசி​யல் அரங்​கில் முக்​கி​யத்​து​வம்​ வாய்ந்​த​தாக பார்க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.