தக் லைஃப் திரைப்படம் இணைத்தில் வெளியீடு : படக்குழு அதிர்ச்சி

சென்னை நேற்று வெளியான தக்லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது/ ‘தக் லைப்’ படம் ரிலீஸாவதற்கு 2 நாட்கள் முன்பாக, தயாரிப்பாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டு அதில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ‘ தக் லைப்’ படத்தை இணையத்தில் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா ? கம்பீர் விளக்கம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த தொடரின் 5 போட்டிகளிலும் பும்ரா விளையாட … Read more

Health: கரும்பு ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாமா? – டயட்டீஷியன் தரும் எச்சரிக்கை

வெயில் காலம் ஆரம்பித்தவுடனே அனைவரும் அருந்தும் பானம் கரும்பு ஜூஸ். கைப்பிடி ஐஸ் கட்டிகளை கரும்பு ஜூஸில் போட்டுவிட்டால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது இந்த ஜூஸை… தற்போது, பகலெல்லாம் வெயில், இரவுகளில் மழை என்று இருந்தாலும், வெயில் நேரத்தில் கரும்பு ஜூஸையே பலரும் நாடிக்கொண்டிருக்கிறார்கள். கரும்பு ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களின் இந்த எச்சரிக்கை டிப்ஸைப் படித்து விடுங்கள். கரும்பு ஜூஸ் *பொங்கல் நேரத்தில் வரும் ஊதா … Read more

கிளாம்பாக்கம் நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல் – நடந்தது என்ன?

கிளாம்பாக்கம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன் தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் … Read more

திருப்பதியில் இன்று முதல் திவ்ய தரிசன டோக்கன் விநியோகம்

திருப்பதி: திருப்​பதி ஏழு​மலை​யானை அலிபிரி அல்​லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்​க​மாக மலை​யேறி செல்​லும் பக்​தர்​களுக்கு பாதி வழி​யில் திவ்ய தரிசன டோக்​கன்​ வழங்​கப்​பட்டு வந்​தது. மேலும் ஒரு லட்டு பிர​சாத​மும் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​தது. இதனை ஜெகன் ஆட்​சி​யில் ரத்து செய்​தனர். தற்​போது சந்​திர​பாபு நாயுடு மீண்​டும் முதல்​வ​ரானதும், திவ்ய தரிசன டோக்​கன்​கள் வழங்​கப்பட வேண்​டும் என பக்​தர்​கள் கோரிக்கை விடுத்​தனர். அதன்​படி, இன்று ஜூன் 6-ம் தேதி மாலை 5 மணி முதல் அலிபிரி அருகே … Read more

அமெரிக்கா – சீனா வரி தொடர்பான பேச்சு தடைபட்ட நிலையில் ஜி ஜின்பிங், ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை

வாஷிங்டன்: அமெரிக்கா – சீனா இடையே வரி தொடர்​பான பேச்சு தடைபட்​டிருந்த நிலை​யில், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​குடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலை பேசி​யில் பேசி​னார். அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பதவி​யேற்​றபின், அமெரிக்கா​வுடன் வர்த்​தகம் செய்​யும் நாடு​கள் வரி​வி​திப்​பில் நியாய​மாக இல்லை என குற்​றம்சாட்​டி​னார். அமெரிக்க பொருட்​களுக்கு பல நாடு​கள் அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம் சாட்​டிய அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிக்​கப்​போவ​தாக கூறி​னார். சீனப் பொருட்​களுக்​கான வரியை அவர் 145 சதவீத​மாக … Read more

கமலஹாசன் பேச்சுக்கு மகாராஷ்டிர ஆளுநர் கடும் எதிர்ப்பு

கோவை மகாராஷ்டிர ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கமலஹாசன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று கோவை விமானநிலையத்தில் மகாராஷ்டிர அளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்க:ளிடம், “பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். காலம் கடந்து அவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றியை கொண்டாடுகின்ற போது கட்டுப்பாடு இல்லாமல் போனதன் விளைவாகத்தான் பத்து உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். அனைத்து இடத்திலும் பொறுமை காப்பது அவசியம் … Read more

மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புனே, சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு பின்னர், உலக நாடுகளிலும் கண்டறியப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் முதல் மற்றும் 2-ம் அலையின்போது தொற்று எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது. தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த சூழலில், இந்தியாவில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்பட்டது. இதற்காக … Read more

பெங்களூரு அணி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் … Read more

பயண தடையை நீக்குங்கள்… அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் கோரிக்கை

வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அங்குள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் அமெரிக்க அரசு, ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தனர். அங்கு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர். இவர்களில் சிலர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து … Read more