கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

உத்தராகண்டின் கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இதில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையானது. சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பனிக் காலத்தில் மூடப்பட்டிருக்கும். கோடைக்காலத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். இந்த ஆண்டு கடந்த மே 2-ம் தேதி கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டது. … Read more

இந்தியா – பாக். போல விரைவில் இஸ்ரேல் – ஈரான் இடையே அமைதி ஏற்படும்: ட்ரம்ப் உறுதி 

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையே என்னுடைய தலையீட்டால் அமைதி ஏற்பட்டதைப் போல விரைவில் இஸ்ரேல் – ஈரான் இடையே அமைதி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: “ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே, அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, விரைவாக ஒரு நல்ல முடிவை எடுத்து, போரை நிறுத்த முடிந்த இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு … Read more

அசாமில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கண்டதும் சுடப்படுவார்கள்! முதல்வர் ஹிமந்தா பிஸ்வா

துப்ரி: அசாம் மாநிலத்தில் வகுப்புவாத கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்து உள்ளார். இரவு நேரங்களில்  வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 8ல் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், சில இடங்களில் மாட்டிறைச்சி வீசப்பட்டதாகவும் முதலமைச்சர் சர்மா குற்றம்சாட்டியிருந்தார். … Read more

"ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்; அந்த திருஷ்டிதான் நடக்கும் சம்பவங்களுக்குக் காரணம்"-அன்புமணி பேச்சு

முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) பாமக நிறுவனர் ராமதாஸ் ‘கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்’ என்று அறிவித்து தனது மகன் அன்புமணி தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதாக குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதையடுத்து தந்தையர் தினமான இன்று (ஜூன் 15)  திருவள்ளூரில் பாமக பொதுக்குழு கூட்டத்தில், “இன்று தந்தையர் தினம். மருத்துவர் ஐயா உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை … Read more

கொடைக்கானல்: மரத்தின் மேல் இருந்து 500 ரூபாய் தாள்களை சூறைவிட்ட குரங்கு; சுற்றுலா பயணிகள் திகைப்பு

திண்டுக்கல்: கொடைக்கானல் குணா குகை பகுதியில் கர்நாடகா சுற்றுலாப் பயணியிடம் ரூ.500 கட்டு ஒன்றை பறித்துச்சென்ற குரங்கு மரத்தின்மேல் சென்று ஒவ்வொரு தாளாக சூறை விட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்படுகிறது. இந்த கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்த பகுதியாக குணா குகை சுற்றுலாத்தலம் உள்ளது. ‘குணா’ படம் வெளியான பிறகு பிரபலமான இந்த சுற்றுலாத்தலம். … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சை பிரிவில் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விழைவு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த ஜூன் 7-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் … Read more

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரம்: மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்; தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள் 

டெல் அவிவ்: இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. எண்​ணெய் வயல்​கள் நாச​மாகின. இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் நடத்​திய பதில் தாக்​குதலில், இஸ்​ரேலில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இரு தரப்​பிலும் நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​தனர். அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் தேதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் … Read more

ஏஐ மூலம் செயல்படும் ஸ்மார்ட் ஹீமோ டயாலிசிஸ் கருவி ‘ரெனாலிக்ஸ்’ அறிமுகம்

ஏஐ மூலம் செயல்படும் உலகின் முதல் ஸ்மார்ட் ஹீமோ டயாலிசிஸ் கருவியை ‘ரெனாலிக்ஸ்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது சிறுநீரகப் பராமரிப்பு கருவி தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் ரெனாலிக்ஸ் ஹெல்த் சிஸ்டம்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரெனாலிக்ஸ் ஆர்.எக்ஸ்.டி. 21 என்ற ஸ்மார்ட் ஹீமோ டயாலிசிஸ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கிளவுட் தளத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதை தொலை தூரத்திலிருந்து ரிமோட் மூலம் இயக்க முடியும். மருத்துவ … Read more

நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி! தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி’  என தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மகன்கள், மகள்கள் தங்களது தந்தையர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தந்தையர் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள … Read more

“Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? அடுத்தது ஆடு, மாடுகளுக்கு மாநாடு" – சீமான்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார் இன்று. நாதக’வின் உழவர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்குப் பிறகு பேசியிருக்கும் சீமான், “சீமான் ‘கள்’ விஷம் என்கிறார்கள்; டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? என்று கேட்க தோன்றுகிறது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் … Read more