மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள் குறித்து அன்புமணி விமர்சனம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்  என்று விமர்சித்தள்ள பாமக தலைவர் அன்புமணி,   ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள்  நடைபெற்றதை கடுமையாக கண்டித்துள்ளதுடன்,  தமிழ்நாட்டில்,  சட்டம் – ஒழுங்கு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது என்று கூறி உள்ளார். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் பல இடங்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.  நேற்று மட்டும்  8 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் … Read more

கேரளாவில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி: கடவுளின் பரிசுகளை நிராகரிப்பது பாவம் என சிரித்தபடியே கூறும் ரம்யா..!

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கண்ணூர் போடூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 44). இவருடைய மனைவி ரம்யா (37). இவர்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 8 பேர் பெண் குழந்தைகள், 2 பேர் ஆண் குழந்தைகள் ஆவர். 9 குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். முதலாவது மகளான அல்பியா 12-ம் வகுப்பு வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது மகள் ஆக்னஸ் மரியா 10-ம் வகுப்பும், மூன்றாவது மகள் ஆன் கிளேர் 8-ம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்கள் 3 பேரும் … Read more

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல் – 27 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

RCB : 'கனவெல்லாம் பலிக்குதே..' – கோலியின் கையில் ஐ.பி.எல் கோப்பை! – கொண்டாடுங்க ரசிகர்களே!

ஆர்சிபி ரசிகர்களின் இத்தனை ஆண்டு ஏக்கமும் முடிவுக்கு வந்திருக்கிறது. அத்தனை கேலிகளையும் கிண்டல்களையும் விமர்சனங்களையும் தாண்டி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. கோலியின் கையில் சிக்காமல் இருந்த அந்த ஐ.பி.எல் கோப்பை இப்போது சிக்கியிருக்கிறது. Virat Kohli – RCB vs PBKS கோலி இந்த அணிக்காக அவ்வளவு உழைத்திருக்கிறார். ஆனால், அதற்கான பலனை அறுவடை செய்யாமலே இருந்தார். இதோ இப்போது அந்த சம்பவம் நடந்துவிட்டது. கோலியின் கையில் இதோ அந்த ஐ.பி.எல் கோப்பை … Read more

வாணியம்பாடியில் 8 பேர் உயிரிழந்த விவகாரம்: தனியார் பல் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனையை நடத்தி வந்தார். இந்த மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு பல் வலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அடுத்த 6 மாதங்களில் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில், கடைசியாக … Read more

“ட்ரம்ப் அழைத்தார்… மோடி சரணடைந்தார்!” – ராகுல் காந்தி விமர்சனம்

போபால்: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்துப் பேசியதும் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, “நாட்டில் தற்போது சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் காங்கிரஸும் அரசியலமைப்பும் இணைந்து நிற்கின்றன. மறுபுறம் அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் உள்ளன. படிப்படியாக … Read more

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் ராஜ்யசபா தொடர்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. பூத் கமிட்டி அமைப்பது, மக்களை சந்திப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஏற்கன திமுக கூட்டணி கட்சிகள் அக்கட்சியுடன் தொடர்ந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியின் … Read more

Telangana Controversy: சர்ச்சையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கருத்து; NCSC முன் வந்து நடவடிக்கை!

தெலங்கானா மாநிலத்தின் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலகு வர்ஷினி, குருகுல பள்ளிகளில் பயிலும் பட்டியல் சமூக மாணவர்கள் குறித்து இழிவாகப் பேசியிருந்தது கடந்த வாரம் சர்ச்சையாகியிருந்தது. NCSC இந்த விவகாரத்தில் தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் (NCSC) தெலங்கானா மாநிலத்தின் தலைமைச் செயலாளரிடமும், டி.ஜி.பி-யிடமும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையைக் (ATR) கோரியிருக்கிறது. தெலங்கானா சமூக நல குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் (TGSWREIS) செயலாளராகப் பணியாற்றும் அலகு வர்ஷினி, பட்டியல் சாதி மாணவர்கள் குறித்து … Read more

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இருபோக பாசனத்துக்கு தாமதமின்றி தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இருபோக பாசனத்துக்கு கால தாமதமின்றி தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரையில் இன்று நடந்த விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர். மதுரை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான, விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் பென்னிகுயிக் அரங்கில் நடைபெற்றது. இதற்கு பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் பாரதி தாசன் தலைமை வகித்தார். மேலூர் பிரிவு உதவி செயற் பொறியாளர் … Read more

மத்திய அரசு மருத்துவனைகளில் ‘மெடிக்கல் ரெப்’களுக்கு தடை!

புதுடெல்லி: நோயாளிகளின் நலன்களைக் காக்கவும், நெறிமுறைகள் சார்ந்த தரத்தை கடைபிடிக்கவும், மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை மருத்துவப் பிரதிநிதிகள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் அனைத்து மருத்துவனைகளிலும், மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவமனை பிரதிநிகள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து டிஜிஹெச்எஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், “இந்த உத்தரவு, மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவப் பிரதிநிதிகளை அனுமதிக்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவு தொடர்பானது. இதன்படி, மருத்துவமனை வளாகத்துக்குள், … Read more