பாரத் பந்த்: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் – அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: ​நாடு​தழு​விய வகை​யில் இன்று நடை​பெறும் பொது வேலை நிறுத்​தத்​துக்கு தமிழகத்​தில் பல்​வேறு தொழிற்​சங்​கங்​கள் ஆதரவு தெரி​வித்​துள்​ள​தால், அரசு சேவை​கள், வங்​கிப்​ பணி​கள் முடங்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், தமிழகத்​தில் பேருந்​துகள் வழக்​கம்போல் இயங்​கும் என அமைச்​சர் சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 17 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தேசிய அளவில் இன்று பொது வேலைநிறுத்​தப் போராட்​டத்​துக்கு மத்​திய தொழிற்​சங்​கங்​கள் அழைப்பு விடுத்​துள்​ளன.

தமிழகத்​தில் ஆளும் திமுக​வின் தொழிற்​சங்​க​மான தொமுச, சிஐடி​யு, ஏஐடி​யுசி உள்​ளிட்ட தொழிற்​சங்​கங்​களும் இப்​போராட்​டத்​துக்கு ஆதரவு தெரி​வித்​துள்​ளன. இதுத​விர ஜாக்டோ – ஜியோ, வரு​வாய் சங்​கங்​களின் கூட்​டமைப்பு மற்​றும் மாநில மையம், அகில இந்​திய வங்கி ஊழியர்​கள் சங்​கம் உள்​ளிட்ட பல்​வேறு அமைப்​பு​களும் இந்த போராட்​டத்​தில் இணை​கின்​றன. இதனால் அரசு சேவை​கள், வங்கி சேவை​கள், பொது போக்​கு​வரத்து சேவை​களில் பாதிப்பு ஏற்​படும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

‘நோ ஒர்க் நோ பே’- இந்​நிலை​யில், இன்று வேலை நிறுத்​தத்​தில் ஈடு​பட்​டால், ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்​படை​யில் ஊதி​யம் வழங்​கப்​ப​டாது என்று தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம் எச்​சரித்​துள்​ளார்.

விடுப்​பு​கள் அனு​ம​திக்​கப்​ப​டாது: இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அரசாணை​யில், இந்த நாளில் மருத்​துவ விடுப்பு தவிர்த்து தற்​செயல் விடுப்பு மற்​றும் இதர விடுப்​பு​கள் அனு​ம​திக்​கப்​ப​டாது என்​றும் அரசு ஊழியர்​களுக்​கான பணி நடத்தை விதி​களை மீறக்​கூ​டாது என்​றும் அனைத்து துறை​களும் காலை 10.15 மணிக்கு துறை​களில் ஊழியர்​களின் வருகை விவரங்​களை மனிதவள மேலாண்​மைத்​துறைக்கு தெரிவிக்க வேண்​டும் என்​றும் கூறி​யுள்​ளார். இதனிடையே பேருந்து சேவை​யில் பாதிப்பு இருக்​காது என்று அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார். இதைதொடர்ந்து போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர்​களுக்கு துறை செயலர் பணீந்​திர ரெட்டி அனுப்​பிய கடிதத்​தில், ‘அட்​ட​வணைப்​படி பேருந்து இயக்​கப்​படு​வதை கட்​டுப்​பாட்டு அறை அமைத்து கண்​காணிக்க வேண்​டும்.

பணிமனைக்கு போலீஸ் பாது​காப்​புக்கு ஏற்​பாடு செய்ய வேண்​டும். பேருந்து இயக்​கத்தை தடுக்​கும் சம்​பவம் நேர்ந்​தால் உடனடி​யாக மாவட்ட சட்ட ஒழுங்கு அதி​காரி​களை அணுக வேண்​டும். 2 மணி நேரத்​துக்கு ஒரு முறை பேருந்து இயக்​கம் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்​டும்’ என்று கூறி​யுள்​ளார். மேலும் வார ஓய்வு எடுக்க வேண்​டாம் என்​றும் அதை ஈடு செய்ய மற்​றொரு நாள் வழங்​கப்​படும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பணிக்கு வராதவர்​கள் மீதும், வேலைநிறுத்​தத்​தில் பங்​கேற்​கு​மாறு தூண்டி விடு​வோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என எச்​சரிக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.