சென்னை கேகே நகரில் உள்ள சிவன் பூங்காவை புதுப்பித்தல், மூன்று நூலகங்களை ‘முதல்வர் படைப்பகம்’ என மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.31.97 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகர்பாபு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் நடைபாதைகள், திறந்தவெளி அரங்கம், நீரூற்றுகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள் போன்ற வசதிகள் ரூ.3.19 கோடியில் மேம்படுத்தப்படும் என்று சிஎம்டிஏ செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
