டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தையிடம் ஹரியானா போலீஸ் தீவிர விசாரணை – நடந்தது என்ன?

குருகிராம்: ஹரி​யானா மாநிலம் குரு​கி​ராமை சேர்ந்த டென்​னிஸ் வீராங்​கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவி​லான போட்டிகளில் விளை​யாடி வந்​தார். குரு​கி​ராமின் சுஷாந்த் லோக் பகு​தி​யில் இவர் குடும்​பத்​துடன் வசித்து வந்த நிலை​யில் நேற்று முன்​தினம் வீ்ட்​டில் ராதிகாவை அவரது தந்தை தீபக் யாதவ் (49) துப்பாக்கியால் சுட்டதில் உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து குரு​கி​ராம் காவல் துறை செய்​தித் தொடர்​பாளர் சந்​தீப் குமார் கூறுகை​யில், “வி​சா​ரணை​யில் மகளை சுட்​டுக்​கொன்​ற​தாக தீபக் ஒப்​புக்​கொண்​டுள்​ளார். உரிமம் பெற்ற ஒரு துப்​பாக்​கியை கைப்​பற்​றி​யுள்​ளோம். ராதி​கா, டென்​னிஸ் அகாடமி நடத்தி வரு​வ​தில் தீபக்​கிற்கு உடன்​பாடில்​லை.

நாம் நல்ல நிலை​யில் இருப்​ப​தால் அகாடமி நடத்த வேண்​டிய அவசி​யமில்லை என்று மகளிடம் கூறி​யுள்​ளார். இதுகுறித்து அவர்​களுக்​குள் அடிக்​கடி வாக்​கு​வாதங்​கள் ஏற்​பட்​டுள்​ளன” என்​றார். இன்​ஸ்​டாகி​ராமில் ராதிகா ரீல்ஸ் வெளி​யிடு​வதும் மியூசிக் வீடியோ ஒன்​றில் தோன்​றியதும் தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி​கள் கூறுகை​யில், “கொலைக்கு அத்​தகைய ஒரு காரணம் இருப்​ப​தாக இது​வரை தெரிய​வர​வில்​லை’’ என்​றனர். இந்​நிலை​யில் தீபக் யாதவை குரு​கி​ராம் நீதி​மன்​றத்​தில் போலீ​ஸார் நேற்று ஆஜர்​படுத்​தினர். இதில் தீபக் யாதவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

ராதிகா யாதவ் நேற்று முன்​தினம் ராதிகா காலை உணவை தயார் செய்​து​கொண்​டிருந்​த​போது அவரை தீபக் தனது துப்​பாக்​கி​யால் 5 முறை சுட்​டுள்​ளார். இதில் 3 குண்​டு​கள் ராதி​கா​வின் முதுகில் பாய்ந்​தன. பலமாத குடும்ப பிரச்​சினையை தொடர்ந்து ராதிகா துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டுள்​ளார். மகளின் வரு​மானத்தை நம்பி வாழ்​வ​தாக சொந்த ஊர் மக்​களால் பலமுறை கேலி செய்​யப்​பட்​ட​தாக போலீ​ஸாரிடம் தீபக் கூறி​யுள்​ளார்.

ஆனால் தீபக்​கின் இந்த வாக்​குமூலத்தை அவரை நன்கு அறிந்த அவரது சொந்த ஊரான வஜி​ரா​பாத்தை சேர்ந்த ஒரு​வர் மறுத்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறுகை​யில், “குரு​கி​ராமில் தீபக்​கிற்கு பல சொத்​துகள் உள்​ளன. இவற்​றின் மூலம் ரூ.15 லட்​சம் முதல் ரூ.17 லட்​சம் வரை அவர் மாத வாடகை பெற்று வரு​கிறார்.

அவருக்கு ஆடம்பர பண்ணை வீடும் உள்​ளது. அவர் பணக்​காரர் என்​பது கிராமத்​தில் உள்ள அனை​வருக்​கும் தெரி​யும். இவ்​வளவு பணம் இருக்​கும் ஒரு​வரை கிராமத்​தில் யார் கேலி செய்​யப் போகிறார்​கள்? தீபக் தனது மகளை மிக​வும் நேசித்​தார்.

மகளின் டென்​னிஸ் பயிற்​சிக்​காக தனது படிப்பை கைவிட்​டுள்​ளார். மகளுக்கு ரூ.2 லட்​சம் மதிப்​புள்ள டென்​னிஸ் ராக்​கெட்​டு​களை வாங்​கிக் கொடுத்​தார். எனவே இந்த கொலைக்கு பின்​னால் தனிப்​பட்ட காரணம் ஏதாவது இருக்​கும்​. டென்​னிஸ்​ அல்​லது டென்​னிஸ்​ அகாட​மி காரண​மாக இருக்​காது’’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.