புதிய போக்குவரத்து திட்டங்களுக்கு அனுமதி பெற முதல்வர் தலைமையில் விரைவில் போக்குவரத்து ஆணைய கூட்டம்

சென்னை: ​முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை பெருநகர போக்​கு​வரத்து ஆணைய கூட்​டம் விரை​வில் நடை​பெற உள்​ளது. இதில், சென்​னை​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து திட்​டங்​களுக்கு ஒப்​புதல் பெறப்பட உள்​ளது.

நாட்​டில் போக்​கு​வரத்து வசதி​களை மேம்​படுத்​தும் வகை​யில், தேசிய நகர்ப்​புற போக்​கு​வரத்து கொள்​கையை மத்​திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு வெளி​யிட்​டது. இதன்​படி, ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் ஒருங்​கிணைந்த பெருநகர போக்​கு​வரத்து ஆணை​யம் ஏற்​படுத்த வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டது. அந்த வகை​யில், சென்னை ஒருங்​கிணைந்த பெருநகர போக்​கு​வரத்து ஆணை​யம் (‘கும்​டா’) கடந்த 2010-ம் ஆண்டு அமைக்​கப்​பட்​டது. எனினும், 2021-ம் ஆண்​டுக்கு பிறகே, தனி​யான நிர்​வாக அமைப்​புடன் இந்த அமைப்பு செயல்பட தொடங்​கியது.

சென்னை பெருநகரின் தற்​போதைய எல்லை மட்​டுமல்​லாது, விரி​வாக்​கம் செய்ய உத்​தேசிக்​கப்​பட்​டுள்ள பகு​திக்​கும் சேர்த்​து, போக்​கு​வரத்து ஒருங்​கிணைப்பு திட்​டங்​களை இந்த ஆணை​யம் உரு​வாக்கி உள்​ளது. இதில், இணைப்பு சாலை, டபுள் டெக்​கர் உள்​ளிட்ட பேருந்து வசதி​களை செயல்​படுத்​துதல், வாகன நிறுத்​தம் உட்பட போக்​கு​ வரத்​துக்​கான அனைத்து அம்​சங்​களும் ஆராயப்​பட்​டுள்​ளன. அந்த வகை​யில் 25 ஆண்​டு​களுக்​கான போக்​கு​வரத்து திட்​டங்​களை வகுத்​துள்ள கும்​டா, முதல்​வரிடம் இதற்​கான ஒப்​புதலை பெறு​வதற்​கான ஏற்​பாட்​டில் தீவிரம் காட்டி வரு​கிறது. அந்த வகை​யில், ஜூலை மாத இறுதி அல்​லது ஆகஸ்ட் மாத தொடக்​கத்​தில் முதல்​வர் தலை​மை​யில் ஆணைய கூட்​டம் நடை​பெற உள்​ளது.

இதுகுறித்து கும்டா சிறப்பு அதி​காரி ஜெயக்​கு​மார் கூறிய​தாவது: கும்​டா​வின் செயல்​பாடு​கள் தற்​போது வேகம் எடுத்​துள்​ளன. சமீபத்​தில், தலை​மைச் செயலர் தலை​மை​யில் 2 முறை செயற்​குழு கூட்​டம் நடை​பெற்​றது. ஒரே பயணச்​சீட்​டில் பல்​வேறு பொது போக்​கு​வரத்​தில் மக்​கள் பயணிக்​கும் திட்​டம் உட்பட பல்​வேறு திட்​டங்​களுக்​கு, முதல்​வர் தலை​மை​யில் விரை​வில் நடக்க உள்ள கூட்​டத்​தில் ஒப்​புதல் பெறப்​படும். கடந்த 4 ஆண்​டு​களில் போக்​கு​வரத்தை ஒருங்​கிணைப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை கும்டா படிப்​படி​யாக மேற்​கொண்​டது. இது​வரை சேகரித்த தரவு​களின் அடிப்​படை​யில், வரும் காலங்​களில் 3 மாதங்​களுக்கு ஒரு​முறை செயற்​குழு, 6 மாதங்​களுக்கு ஒரு​முறை ஆணைய குழுவை கூட்டி அடுத்​தடுத்த திட்​டங்​களை செயல்​படுத்த உள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.