மதுரை பிரச்சினைகளை டெல்லியில் அவர் என்றாவது பேசியுள்ளாரா? – சு.வெங்கடேசனுக்கு எதிராக கொந்தளித்த மேயர், கவுன்சிலர்கள்

மதுரை: ​‘தி​முக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்​வை​யும் சிந்தி உழைத்​த​தாலேயே சு.வெங்​கடேசன் எம்​.பி.​யாகி​யுள்​ளார்’ என்று மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக மேயரும், அக்​கட்சியின் கவுன்​சிலர்​களும் கொந்​தளித்​தனர்.

இந்​தி​யா​வின் தூய்மை நகரங்​களின் பட்​டியலில் மதுரை கடைசி இடம் பிடித்​தது குறித்து சு.வெங்​கடேசன் எம்​.பி. விமர்​சித்​திருந்​தார். மதுரை நகரின் தூய்மை மோச​மாக உள்​ளது, மாநக​ராட்சி சுய பரிசோதனை செய்​து​கொள்ள வேண்​டும். தூய்​மை​யைப் பாது​காக்க முதல்​வர் தலை​யிட வேண்​டும் என்று அவர் தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக கவுன்​சிலர்​கள் குழுத் தலை​வர் மா.ஜெய​ராமன் பேசும்​போது, “தூய்மை நகரங்​கள் பட்​டியலில் பல்​வேறு குறை​பாடு​கள், முரண்​பாடு​கள் உள்​ளன. கீழடி ஆய்வை மதிக்​காத மத்​திய அரசின் அறிக்​கையை நாம் ஏன் மதிக்க வேண்​டும்? பல லட்​சம் பேர் பங்​கேற்ற சித்​திரை திரு​விழா, திருப்​பரங்குன் ​றம் கும்​பாபிஷேக நிகழ்ச்​சிகளில் மாநக​ராட்சி சிறப்​பான ஏற்​பாடு​ செய்​திருந்​தது. நாடு முழு​வதும் இருந்து வந்த கம்​யூனிஸ்ட் தலை​வர்​கள் பங்​கேற்ற மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநாட்​டுக்கு மாநக​ராட்சி சார்​பில் சிறப்பான ஒத்துழைப்பு வழங்​கப்​பட்​டது. இதை அறியாமல், திமுக கூட்​ட​ணி​யில் இருந்​து​ கொண்டே எம்​.பி. சு.வெங்கடேசன் மதுரையை குப்பை மாநக​ராட்சி என்று இழி​வாகப் பேசி​யது மிகுந்த மனவருத்​தத்தை ஏற்​படுத்தி உள்ளது.

திமுக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்வை​யும் சிந்தி உழைத்​த​தால்​தான் அவர் இன்று எம்​.பி.​யாக டெல்லி சென்று வரு​கிறார். மக்​களவை​யில் பாஜக எதிர்ப்பு தவிர, மதுரை மக்​கள் பிரச்​சினை​களை அவர் என்​றாவது பேசி​யுள்​ளா​ரா?” என்​றார். அதற்கு மார்​க்சிஸ்ட் கம்​யூனிஸ்​டைச் சேர்ந்த துணை மேயர் நாக​ராஜன், “தவறாக திரித்து சொல்ல வேண்​டாம். தனிப்​பட்ட முறை​யில் எம்​.பி. மீது விமர்​சனமோ, விரோதமோ கொள்ள வேண்​டாம். அவரது நிதி​யில் ஒவ்​வொரு வார்டிலும் வேலை நடந்​துள்​ளது” என்​றார்.

மேயர் இந்​தி​ராணி “எம்​.பி. சு.வெங்​கடேசன் மீது எங்​களுக்கு மரி​யாதை உண்​டு. ஒட்​டுமொத்த தமிழக நகரங்​களை​யும், மத்​திய அரசு தூய்மை நகரங்​கள் பட்​டியலில் பின்​னுக்​குத் தள்​ளிய நிலை​யில், மதுரை மாநக​ராட்​சியை பற்றிமட்​டும் அவர் விமர்​சனம் செய்​ததை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது. தூய்​மைப் பணி​யாளர்​கள், அதி​காரி​களின் உழைப்பு மக்​களுக்கு தெரி​யும். அவருக்​குத் தெரி​யாமல் போனது​தான் வருத்​தம்” என்​றார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கவுன்​சிலர் விஜ​யா, “பட்​டிமன்​றம் மாதிரி பதி​லுக்கு பதில் பேசக்​கூ​டாது. எம்​.பி. சொன்ன தகவலை முழு​மை​யாக புரிந்​து​கொள்​ளாமல் பேசக்​கூ​டாது” என்​றார்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கவுன்​சிலர் குமர​வேல், “நாங்​கள் அதி​முக​வுக்கு எதி​ராக குரல் எழுப்​பவே வந்​தோம். ஆனால் திசை மாறி, கடைசி​யில் உங்​களுக்கு எதி​ராக​வும் எங்​களை பேச வைத்​து​விட்​டீர்​கள். எம்​.பி. டெல்லி செல்வதற்கு வியர்வை சிந்தி உழைத்​ததாக திமுக கவுன்​சிலர் ஜெய​ராமன் கூறி​னார். நீங்​கள் கொடுத்த 2 சீட்​டுக்​காக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட்கட்​சித் தொண்​டர்​களும், தமிழகம் முழு​வதும் உங்​கள் வெற்​றிக்​காக உழைத்​துள்​ளனர். கம்யூனிஸ்ட், விசிக, காங்​கிரஸ் கூட்​டணி இருந்​தால்​தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடி​யும், நினை​வில் வைத்​துக் கொள்​ளுங்​கள்” என்​றார். இதையடுத்​து, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கவுன்​சிலர்​கள் இருக்கை அருகே சென்​று, அவர்​களுக்​கு எதி​ராக தி​முக​வினர்​ கோஷமிட்​ட​தால்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.