அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொலை செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆணைய … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேகவெடிப்பு காரணமாக இமாச்சப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரின் ஊடக ஆலோசகர் … Read more

“இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” – கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

அக்ரா (கானா): “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் ஓர் அமைப்பு அல்ல; அது நமது அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார். இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். நாடாளுமன்ற சபாநாயகர் அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின், இந்த … Read more

குழந்தைக்கு மேக்-அப் போட்டு அழகு பார்த்துவிட்டு..மொத்த குடும்பமும் பலி!

Rajasthan Family Dress Up With Boy Before Suicide : ராஜஸ்தானில், ஒரு குடும்பமே கடன்தொல்லை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள Phoenix படம் எப்படி? திரை விமர்சனம் இதோ!

Vijay Sethupathi Son Surya: சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள பீனிக்ஸ் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

"காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்.." விசிக உயர்நிலைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பும்ரா முடிவெடுக்கும் இடத்தில் இருக்கக்கூடாது – ரவி சாஸ்திரி

Ravi Shastri, Bumrah : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிம்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. ஓய்வு வேண்டும் என்பதற்காகவும், பணிச்சுமையை குறைப்பதற்காகவும் அவர் இப்போட்டியில் விளையாடவில்லை என இந்திய அணி நிர்வாகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் பிளேயர் ரவி சாஸ்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்தும், … Read more

Parandhu Po: 'அழுதாங்க ஆனா சிரிச்சு சிரிச்சு அழுதாங்க' – இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இத்திரைப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று(ஜூலை 3) செய்தியாளர்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. அதன் பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.   பறந்து போ முதலில் பேசிய மிர்ச்சி சிவா, “ எதிர்பார்த்ததைவிட எல்லோரும் நன்றாக சிரிச்சுப் பார்த்தீங்க. ‘சென்னை 28’ படத்துல இருந்தே உங்களுடன் ஒரு கனெக்ட் இருக்கு. இன்னைக்கு … Read more

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரத்து

டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்துள்ளது. ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதை பராமரிக்காவிட்டால் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படுகிறது  அபராதத் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். மெட்ரோ நகரங்களுக்கு ஒரு வித கட்டணமும் சிறிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும் ஊரக பகுதிகளுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. இது சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. பிரபல பொதுத்துறை … Read more

அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; வியன்னாவில் நிறுத்தி வைப்பு

புதுடெல்லி, டெல்லியில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்படு சென்றது. இந்த விமானம் வழக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னாவில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்படும். அந்த வகையில், வியன்னா விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால் சரி செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், விமானம் … Read more