சுகன்யா சம்ரிதி யோஜனா: PNB ONE செயலியில் ஆன்லைனில் திறப்பது எப்படி?

Sukanya Samriddhi Yojana: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), அதன் அதிகாரப்பூர்வ மொபைல் வங்கி தளமான PNB ONE செயலி மூலம் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) கணக்குகளைத் திறக்க டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், ஏற்கனவே உள்ள PNB வாடிக்கையாளர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்காக SSY கணக்குகளை தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஈஸியாக திறக்க அனுமதிக்கிறது. இனி நேரடியாக வங்கி கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.  சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) … Read more

மத்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : அரசு அறிவிப்பு

போபால் மத்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது இன்று மத்திய பிரதேச முதல்வ்ர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம், “12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்ற 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்புகளை மாநில அரசு வழங்கும். இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.235 கோடி செலவிடப்படும். திறமையான மாணவர்களுக்கு அரசு துணை நிற்கும். எங்களுடைய செயல்பாட்டை இது பிரதிபலிக்கிறது. நம்முடைய இளம் மாணவர்களை நாம் வாழ்த்துகிறோம். … Read more

புதுச்சேரியில் அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.க்கள் பட்டியலுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காதது ஏன்? – பரபரப்பு தகவல்

புதுச்சேரி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த சாய்.சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.க்களான வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் கட்சி பணிக்கு செல்வதாக கூறி கடந்த 25-ந்தேதி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான்குமாரையும், நியமன எம்.எல்.ஏ.க்களாக முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், இந்து முன்னணி முன்னாள் தலைவர் செல்வம், காரைக்கால் தொழில் அதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோரை நியமிக்க மத்திய அரசுக்கு கடந்த 28-ந்தேதி பட்டியல் அனுப்பப்பட்டது. வழக்கமாக மத்திய … Read more

கால்பந்து உலகை உலுக்கிய சம்பவம்.. கார் விபத்தில் 28 வயதான பிரபல வீரர் பலி.. ரசிகர்கள் அதிர்ச்சி

மாட்ரிட், போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான தியாகோ ஜோட்டா (வயது 28) ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கி பலியானார். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே கார் விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துயர விபத்தில் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் பலியானார். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து வெளியான தகவலின் படி, ஜோட்டாவும் அவரது சகோதரரும் தங்களது காரில் சென்றபோது, மற்றொரு வாகனத்தை … Read more

பாலி தீவில் படகு கடலில் மூழ்கி விபத்து: 2 பேர் பலி.. மாயமான 43 பேரின் கதி என்ன..?

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு கிழக்கு ஜாவாவில் உள்ள கெட்டபாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. இது பாலியில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்குச் சென்று … Read more

13 வயது சிறுவன் கடத்திக் கொலை; கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் – மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13). இவர் நேற்று மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை எனக் கூறி, பெற்றோர் … Read more

அஜித்குமாரை சித்ரவதை செய்ய ஆணையிட்ட காவல்துறை உயர் அதிகாரி யார்? – அன்புமணி கேள்வி

சென்னை: அஜித்குமாரை சித்ரவதை செய்யும்படி, காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும், என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு … Read more

இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் டெவின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செவ்வாயன்று (ஜூலை 1) நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடலின் போது, ​​அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கும் போது புதிய கட்டமைப்பை … Read more

Fact Check: கணவரை பற்றி இழிவாக பதிவிட்ட நயன்தாரா? வைரலாகும் போஸ்ட்

Fact Check Nayanthara About Vignesh Shivan : நடிகை நயன்தாரா, தனது கணவர் குறித்து இழிவாக பதிவிட்டதாக ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா, இல்லையா என்பது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

அஜித்குமார் லாக்கப் மரணம்: சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க அவசியமே இல்லை – ஹென்றி திபேன் பளிச்!

Ajithkumar Lockup Death: அஜித்குமார் காவல் நிலைய சித்திரவதை படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் கூறியுள்ளார்.