மியான்மரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்

நய்பிடாவ், மியான்மரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 135 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.92 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.39 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை 1 More update … Read more

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" – ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவரை இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக அஜித்குமார் சனிக்கிழமை அன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், அஜித்குமாரின் மரணத்துக்குப் பிறகான எஃப்.ஐ.ஆரில், நகையைத் திருடியதை அஜித்குமார் ஒப்புக்கொண்டதாகவும், போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு … Read more

தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: மத்திய அரசு தமிழகத்தை இரண்டாம் தர குடிமக்களாக கருதி கல்வி உள்ளிட்ட எல்லா நிதியையும் நிறுத்திவிட்டது. தமிழகம் இரண்டாம் தர மாநிலமாக சென்றுவிடக்கூடாது என்பதில் அக்கறையுள்ள கட்சியாக திமுக இருக்கிறது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் குறித்து வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை-1) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பல்வேறு … Read more

பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

புதுடெல்லி: பிஹார் கிராமத்தில் சடங்குகள் செய்யும் பிராமணர்களுக்கு தடை விதித்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது, உத்தரப் பிரதேசத்தில் கதாகலாட்சேபகர் மீதானத் தாக்குதல் எதிரொலியாகக் கருதப்படுகிறது. உத்தரப் பிரதேசத்துக்கு இணையாக யாதவர்கள் சமூகம் அதிகம் இருக்கும் மாநிலம் பிஹார். இதன் மோதிஹாரி மாவட்டத்தின் அடாபூரிலுள்ள திகுலியா கிராமத்தின் பல இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‘இந்த கிராமத்தில் பிராமணர்கள் பூஜை செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது! பிடிபட்டால், அவர்களை அழைத்த நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள்’ என எழுதப்பட்டுள்ளது. பிராமண … Read more

1000 நாட்களாக வீட்டை விட்டு வெளியேராத நபர்! குப்பைகளுக்கு நடுவில் வாழ்க்கை-வீடியோ

Man Did Not Left House In 3 Years : ஒரு நபர், 3 வருடங்களான தனது வீட்டை விட்டு வெளியேவே வரவில்லை. குப்பைகளுக்கு நடுவில் வாழ்ந்திருக்கிறார். அதற்கு காரணம் என்ன தெரியுமா?  

தொடரும் வரதட்சணை கொடுமை.. திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் எடுத்த சோக முடிவு!

பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

'உங்களுடைய ஆர்வம், கடின உழைப்பு நம்பிக்கை பலனளித்திருக்கிறது' – விஷ்ணு மஞ்சுவை வாழ்த்திய சூர்யா

மோகன் பாபு தயாரிப்பில் அவரின் மகன் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன் லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கண்ணப்பா’. இந்நிலையில் நடிகர் விஷ்ணு மஞ்சுவிற்கு பூங்கொத்துடன் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார் நடிகர் சூர்யா. ‘கண்ணப்பா’ படம் அவர் அனுப்பி இருக்கும் வாழ்த்துச் செய்தியில், “அன்புச் சகோதரர் விஷ்ணுவுக்கு இந்த அற்புதமான மைல்கல்லை எட்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய ஆர்வம், கடின உழைப்பு, மற்றும் … Read more

புதுச்சேரி முதல்வர் மீது முன்னாள் முதல்வர் கடும் சாடல்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தற்போதைய முதல்வரான ரங்கசாமியை கடுமையகா சாடி உள்ளார். இன்று புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயசாமி செய்தியாளர்களிடம் :பா.ஜ.க.வில் பணம் இல்லாமல் பதவி கிடைக்காது என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அங்கே மத்தியிலே மத்தியில் நரேந்திர மோடி அதானிக்கும் அம்பானிக்கும் பிரதமராக இருப்பது போல் புதுச்சேரி பா.ஜ.க. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்களின் கட்சி அடமானம் வைத்துள்ளது. என் ஆர் காங்கிரஸ் கட்சியை முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவிடம் அடமானம் வைத்துள்ளதாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் பேசி வருகின்றனர்.  … Read more

வாடகை வீட்டில் தம்பதி பிணம்: தற்கொலையா?… போலீசார் விசாரணை

கோட்டயம், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ராமாபுரம் அருகே உள்ள குடப்புலம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 32), ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி ரஷ்மி (30). இவர் ஈராட்டுப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் 2 பேரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர் விஷ்ணுைவ செல்போனில் அழைத்து உள்ளார். அதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து வீட்டு உரிமையாளர் நேரில் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு … Read more

ஜூனியர் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

நார்த்தம்டான், இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நார்த்தம்டானில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் … Read more