அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!
TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IPL 2026 CSK Squad Players List: சிஎஸ்கே அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடித்தே இல்லை. இதுமட்டுமின்றி, 18 ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த அத்தனை சாதனைகளும், பெருமைகளும் ஒரே சீசனில் தவிடுபொடியாகின. எம்எஸ் தோனி (MS Dhoni) கட்டியெழுப்பிய அந்த மஞ்சள் சாம்ராஜ்யம், ஒரே சீசனில் பெரியளவில் ஆட்டம் கண்டிருக்கிறது. IPL 2026 CSK: தோனிக்காக சிஎஸ்கே இதை செய்யுமா? தற்காலிக கேப்டனாக உள்ள வந்த தோனியால் கூட சிஎஸ்கே இந்த … Read more
இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ‘மை விகடன்’ என்ற களம் மூலம் விகடன் வாசகர்கள் தொடர்ந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகின்றனர். கடந்த மாதம்கூட, பயணக்கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. அவற்றில் சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ‘ஒரு கடிதம் எழுதினேன்’ என்ற கட்டுரைப் போட்டி ஒன்றும் நடைபெற்றது. Paranthu Po Special Screening பிள்ளைகள் பெற்றோர்களுக்கு அனுப்பும் வகையிலும், பெற்றோர்கள் … Read more
Sukanya Samriddhi Yojana: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), அதன் அதிகாரப்பூர்வ மொபைல் வங்கி தளமான PNB ONE செயலி மூலம் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) கணக்குகளைத் திறக்க டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், ஏற்கனவே உள்ள PNB வாடிக்கையாளர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்காக SSY கணக்குகளை தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஈஸியாக திறக்க அனுமதிக்கிறது. இனி நேரடியாக வங்கி கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) … Read more
போபால் மத்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது இன்று மத்திய பிரதேச முதல்வ்ர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம், “12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்ற 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான இலவச லேப்டாப்புகளை மாநில அரசு வழங்கும். இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.235 கோடி செலவிடப்படும். திறமையான மாணவர்களுக்கு அரசு துணை நிற்கும். எங்களுடைய செயல்பாட்டை இது பிரதிபலிக்கிறது. நம்முடைய இளம் மாணவர்களை நாம் வாழ்த்துகிறோம். … Read more
புதுச்சேரி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த சாய்.சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.க்களான வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் கட்சி பணிக்கு செல்வதாக கூறி கடந்த 25-ந்தேதி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான்குமாரையும், நியமன எம்.எல்.ஏ.க்களாக முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், இந்து முன்னணி முன்னாள் தலைவர் செல்வம், காரைக்கால் தொழில் அதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோரை நியமிக்க மத்திய அரசுக்கு கடந்த 28-ந்தேதி பட்டியல் அனுப்பப்பட்டது. வழக்கமாக மத்திய … Read more
மாட்ரிட், போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான தியாகோ ஜோட்டா (வயது 28) ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கி பலியானார். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே கார் விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துயர விபத்தில் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் பலியானார். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து வெளியான தகவலின் படி, ஜோட்டாவும் அவரது சகோதரரும் தங்களது காரில் சென்றபோது, மற்றொரு வாகனத்தை … Read more
ஜகார்த்தா, இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு கிழக்கு ஜாவாவில் உள்ள கெட்டபாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. இது பாலியில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்குச் சென்று … Read more
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் – மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13). இவர் நேற்று மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை எனக் கூறி, பெற்றோர் … Read more
சென்னை: அஜித்குமாரை சித்ரவதை செய்யும்படி, காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும், என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு … Read more