Shoe collection: தேவைக்கு அதிகமாக ஷூ வாங்கிக் குவிக்கும் மக்கள்; இதன் பின்விளைவு என்ன தெரியுமா?

நான் பயன்படுத்தும் ஷூக்கள் பழசானதும் அதனை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிகிறோம். இவ்வாறு எறியும் ஷூக்களால் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது. இந்தியாவைப் பொறுத்தவரை 65% காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக ஆக்ராவில் ஒரு நாளைக்கு 10 லட்சம் ஜோடி ஷூக்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் பல டன் கழிவுகள் வெளி வருகின்றன. ஷூக்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்ய முடியாதவையாக உள்ளன. இப்படி மறுசுழற்சி செய்ய முடியாத அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் … Read more

காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பையும் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் … Read more

தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இதுவரை 4 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் … Read more

பயில்வான் ரங்கநாதனுக்கு எச்சரிக்கை விடுத்த விஷால் மற்றும் கார்த்தி! ஏன் தெரியுமா?

South Indian Artistes Association: பயில்வான் ரங்கநாதன் நடிகர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. 

இனி கேப்டன் கூல் என்ற வார்த்தை தோனிக்கு தான் சொந்தம்.. டிரேட் மார்க் வாங்கியாச்சு!

Captain Cool: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரை செல்லமாக அவரது ரசிகர்கள் கேப்டன் கூல் என கூறுவது வழக்கம். எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், நிதானமாக பதற்றமின்றி களத்தில் முடிவுகளை எடுப்பதால், இவ்வாறு அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். களத்தில் முடிவெடுப்பது மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் பதற்றமின்றி கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தருவார். அப்படி இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.  குறிப்பாக 2011 ஒருநாள் உலக கோப்பை … Read more

Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் – தனுஷ் படங்கள் பரபர அப்டேட்

தனுஷுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல். தமிழ்,தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பல மொழிகளில் ஓடிக்கொண்டிருந்தார். சமீபத்தில் ‘குபேரா’ திரைக்கு வந்தது. பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. இந்தப் படம் இந்தாண்டு நவம்பர் இறுதியில் வெளியாகும் என்கிறார்கள். தமிழில் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படம், அக்டோபர் முதல் தேதியன்று வெளியாகிறது. ஆக, இந்தாண்டில் தனுஷுக்கு மூன்று படங்கள் என வைத்துக்கொள்ளலாம். இந்தி படப்பிடிப்பில் தனுஷ் … Read more

Amazon Prime Day 2025: அசத்தல் தள்ளுபடிகளுடன் வரும் அமேசான் சேல், டேட்ஸ் இதுதான்

Amazon Prime Day 2025: ஆன்லைன் விற்பனை தளமான அமேசான், அமேசான் பிரைம் டே 2025 -க்கான தேதிகளை அறிவித்துள்ளது. மேலும் இந்த முறை எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சேல் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்த ஷாப்பிங் நிகழ்வு ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை நடைபெறும். இதன் மூலம் பிரைம் உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் இடைவிடாத சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் புதிய தயாரிப்பு வெளியீடுகள் கிடைக்கும். Amazon Fulfillment Centres அடுத்த … Read more

அஜித்குமார் உயிரிழப்பு – வலிப்பு என எஃப்ஐஆரில் பதிவு? சிபிஐ விசாரணைக்கு மாற்ற எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, விஜய் வலியுறுத்தல்…

சென்னை: சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார்  உயிரிழப்புக்கு வலிப்பு நோய் காரணம்  என எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதுபோல, காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் மரணம் குறித்து,   இரட்டை வேட முதல்வர் ஆட்சியில் நியாயம் கிடைக்காது என்றும், இந்த  காவல் நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் … Read more

ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சாலையின் நடுவே மரங்கள் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

பாட்னா, பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் பாட்னா- கயா மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.100 கோடி செலவில் புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 7½ கி.மீ. தூரம் அமையும் இந்த சாலையில் நடுவில் மரங்கள் இடையூறாக இருந்தது. இதையடுத்து அந்த மரங்களை அகற்றும்படி வனத்துறையிடம் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தது. ஆனால், இதற்கு பதிலாக 14 எக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வனத்துறையினர் கோரிக்கை வைத்தனர். இது ஏற்கப்படவில்லை. இதனால், … Read more

டிரம்பை நேசிக்கிறோம்; பாலஸ்தீனிய மக்கள் கோஷம் – காரணம் என்ன?

வாஷிங்டன் டி.சி., காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும், நாங்கள் பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீது … Read more