நாட்டின் மிக நீளமான சரக்கு ரயில் அறிமுகம்: 354 வேகன்களுடன் 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது

புதுடெல்லி: ​நாட்​டின் நீள​மான சரக்கு ரயிலை மத்​திய ரயில்வே அமைச்​சகம் அறி​முகம் செய்​துள்​ளது. இந்த ரயி​லானது 354 வேகன்​களு​டன் 4.5 கிலோ மீட்​டர் நீளம் கொண்​ட​தாக அமைந்​துள்​ளது. நாட்​டின் மிக நீள​மான சரக்கு ரயில் என்ற பெரு​மையை பெற்​றுள்ள இதற்கு ருத்​ராஸ்த்ரா என்று பெயர் சூட்​டி​யுள்​ளனர்.

இதுகுறித்து மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்​தில் கூறிய​தாவது: ருத்​ராஸ்த்ரா ரயில் கடந்த 7-ம் தேதி தனது பயணத்​தைத் தொடங்​கி​யுள்​ளது. 354 வேகன்​களைக் கொண்ட இந்த ரயில் நாட்​டின் மிக நீள​மான சரக்கு ரயி​லாக இருக்​கும். 4.5 கிலோ மீட்​டர் நீளத்தை கொண்​ட​தாக​வும், மிகச்​சிறப்​பாக​வும் இந்த ரயில் உள்​ளது.

உத்தர பிரதேசத்​தின் கஞ்ச்​க​வாஜா ரயில் நிலை​யத்​தில் இருந்து இது பயணத்​தைத் தொடங்​கி​யுள்​ளது. இந்த ரயில் 7 இன்​ஜின்​களைக் கொண்டு இயக்​கப்​படு​கிறது. மேலும் இது உலகின் மீக நீள​மான 2-வது சரக்கு ரயி​லாக உள்​ளது. உலகின் மிக நீள​மான சரக்கு ரயில் என்ற பெரு​மையை ஆஸ்​திரேலி​யா​வின் பிஎச்​பி(7.3 கிலோ மீட்​டர் நீளம், 682 வேகன்​கள்) பெற்​றுள்​ளது. ருத்​ராஸ்த்ரா ரயில் சராசரி​யாக மணிக்கு 40 கிலோமீட்​டர் வேகத்​தில் சென்று 5 மணி நேரத்​தில் 200 கிலோ மீட்​டர் தூரத்தை எளி​தில் கடக்​கும். நேரத்தை சேமிப்​ப​தோடு மட்​டுமல்​லாமல் இந்த ரயிலை இயக்​கு​வதற்​கான செல​வும் குறைவு. இவ்​வாறு அவர் அதில்​ கூறி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.