பாரதியார் பாடலை மெய்மறந்து ரசித்த பார்வையாளர்கள் | ‘சிங்கா 60’ கலைத் திருவிழா

சென்னை: சென்னை​யில் நடை​பெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா​வில், 9-வது நாளான நேற்று நடை​பெற்ற இசை நிகழ்ச்​சி​யில் பார​தி​யார் பாடலை பார்​வை​யாளர்​கள் மெய் மறந்து ரசித்​தனர்.

இந்​தி​யா​வோடும், தமிழகத்​தோடும் நெருங்​கிய கலாச்​சார தொடர்​பு​கொண்ட தென்​கிழக்கு ஆசிய நாடான சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திரு​விழாவை சென்​னை​யில் ஆகஸ்ட் 1 முதல் பிரம்​மாண்​ட​மாக நடத்தி வரு​கின்​றன.

கலை, கலாச்​சா​ரம், நாடகம், பொருளா​தா​ரம், உணவு என பல்​சுவை நிகழ்ச்​சிகளை உள்​ளடக்​கிய இந்த திரு​விழா ஆகஸ்ட் 1-ம் தேதி அடை​யாறு பத்​ம​நாப நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் இந்​திய – சிங்​கப்​பூர் ஓவிய – சிற்​பக் கண்​காட்​சி​யுடன் தொடங்​கியது. இந்​நிகழ்ச்​சியை சிங்​கப்​பூர் துணை தூதர் எட்​கர் பாங்க் தொடங்​கி​வைத்​தார். ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தொடர்ந்து நடை​பெறும் இந்த கண்​காட்​சி​யில், உலகப் புகழ்​பெற்ற ஓவிய, சிற்​பக் கலைஞர்​களான சிங்​கப்​பூரைச் சேர்ந்த குமாரி நாகப்​பன், பி. ஞானா, மகாலட்​சுமி கண்​ணப்​பன், ஆர்​யன் அரோ​ரா, இந்​தி​யா​வைச் சேர்ந்த கவிதா பத்ரா உள்​ளிட்ட கலைஞர்​களின் படைப்​பு​களை கண்டு ரசிக்​கலாம்.

இந்​நிலை​யில், சிங்கா 60 கலைத் திரு​விழா​வின் 9-வது நாளான நேற்று இரவு ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள திரு​வாவடு​துறை ராஜரத்​தினம் கலை​யரங்​கத்​தில் ‘பார​தி​யார்​-​பார்​வை​யிலும், குரலிலும்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது. முதல் நிகழ்​வாக ‘நல்​லிணக்​கத்​தில் பார​தி​யார்’ என்ற தலைப்​பில் சிங்​கப்​பூர்​-இந்​தியா இசைக்​குழு​வினரின் இசைநிகழ்ச்சி நடந்​தது. இதில் ‘காக்​கைச் சிறகினிலே நந்​தலாலா’, ‘மலரின் மேவு திரு​வே’, ‘மன​தில் உறுதி வேண்​டும்’, ‘வெள்​ளைத் தாமரை பூவில் இருப்​பாள்’, ‘நல்ல காலம் வரு​குது’, ‘வெண்​ணிலா​வே’, ‘ஒளி படைத்த கண்​ணி​னாய் வா வா வா’ ஆகிய பாடல்​களை பாடினர். பார்​வை​யாளர்​கள் மெய்​மறந்​தும், உடன் சேர்ந்து பாடி​யும் வெகுவாக ரசித்​தனர்.

இதைத் தொடர்ந்​து, பார​தி​யாரின் ஆன்​மிக பயணம் தொடர்​பாக சவுந்​தர்யா சுகு​மார் ஐயர் தயாரித்​துள்ள ஆவணப்​படம் திரை​யிடப்​பட்​டது. இதில் பார​தி​யாரின் குழந்​தைப் பரு​வம், மாணவப் பரு​வம், காசி​யில் மேற்​படிப்பை தொடர்ந்​தது, நிவே​திதை உடனான சந்​திப்​பு, அதன்​மூலம் பெண் அடிமைத்​தனத்தை புரிந்​து​கொண்​டது, பத்​திரி​கை​யாள​ராக புதிய அவதா​ரம் எடுத்​தது, தேசபக்தி பாடல்​களை எழுதத் தொடங்​கியது, புதுச்​சேரி வருகை மற்​றும் அரவிந்​தர் உட​னான சந்​திப்பு உள்​ளிட்ட நிகழ்​வு​கள் தொடர்​பான அரிய தகவல்​கள் காட்​சிப்​படுத்​தப்​பட்​டிருந்​தன. அக்​காட்​சிகளை பார்​வை​யாளர்​கள் வியந்து பார்த்து ரசித்​தனர்.

நடிகை சுஹாசினி, மாண்டலின் யூ ராஜேஷ், அனில் ஸ்ரீனிவாசன், சவுந்தர்யா சுகுமார் ஐயர், லலிதா வைத்தியநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். `இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம் வரவேற்றார். நிகழ்ச்சிகளை இளங்கோ குமணன் தொகுத்து வழங்கினார். இந்​நிகழ்ச்​சி​யில், `இந்து தமிழ் திசை’ இயக்​குநர்​கள் அகிலா விஜய் ஐயங்​கார், லட்​சுமி ஸ்ரீநாத், விஜயா அருண் உட்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

‘சிங்கா 60’ நிகழ்ச்​சிக்​கான பங்​கு​தா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி​யும் துணை பங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்​பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி, ரெசிடென்சி டவர்​ஸ், ஃபோரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்​கின் டேல்​ஸ், மேவெண்​டோயர், சிங்​கப்​பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகிய​வை​யும் உள்​ளன.

இன்று நிறைவடைகிறது: பல்​சுவை நிகழ்ச்​சிகளின் மூலம் சென்​னை​வாசிகளை மகிழ்​வித்து வந்த சிங்கா 60 கலைத் திரு​விழா இன்று (ஞா​யிற்​றுக்​கிழமை) நிறைவடைகிறது. தி.நகர் தியாக​ராய சாலை​யில் உள்ள தி ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்​டலில் (ஸ்​கை) சிங்​கப்​பூர் உணவுத் திரு​விழா​வும் இன்​றுடன் நிறைவடை​யும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.