விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்​டுப்​பாடு​களை, சென்னை காவல் துறை விதித்​துள்​ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இந்து அமைப்​பு​கள் சார்​பில், அன்​றைய தினம் பொது இடங்​களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்​கப்பட உள்​ளன. பின்​னர், இந்த சிலைகள் வரும் 30, 31 ஆகிய தேதி​களில் ஊர்​வல​மாக எடுத்து செல்​லப்​பட்டு கடற்​கரைகள் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் கரைக்கப்படும்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் இந்து அமைப்பு நிர்​வாகி​களு​டன் காவல் கூடு​தல் ஆணை​யர்​கள் கண்​ணன் (தெற்​கு), பிர​வேஷ்கு​மார் (வடக்​கு), கார்த்​தி​கேயன் (போக்​கு​வரத்​து) உள்​ளிட்​டோர் நேற்று ஆலோ​சனை நடத்​தினர்.

இந்த ஆலோ​சனை​க் கூட்டத்தில், இந்து முன்​னணி, இந்து மக்​கள் கட்​சி, சிவசே​னா, இந்து அனு​மன் சேனா, பாஜக, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்​ளிட்ட பல அமைப்​பு​களை சேர்ந்த சுமார் 150 பிர​தி​நி​தி​கள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்​தாய்​வில், விநாயகர் சிலைகள் நிறு​வுமிடத்​தின் நில உரிமை​யாளர்​கள், சம்​பந்​தப்​பட்ட உள்​ளாட்சி அமைப்​பு​கள், நெடுஞ் சாலைத்​துறை அல்​லது அரசுத் துறை​யிட​மிருந்து அனு​மதி பெற்​றிருக்க வேண்​டும்.

தீயணைப்​புத் துறை, மின்​வாரி​யம் ஆகிய​வற்​றிட​மிருந்து தடை​யில்லா சான்​றுகள் பெற்​றிருக்க வேண்​டும். சம்​பந்​தப்​பட்ட காவல் நிலைய அதி​காரி​யிடம் விநாயகர் சிலைகளை நிறு​வுவதற்கு அனு​மதி பெற்​றிருக்க வேண்​டும்.

நிறு​வப்​படும் சிலை​யின் உயர​மானது அடித்​தளத்​திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்​கக் கூடாது. பிற வழிபாட்டுத்தலங்கள், மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​கள் ஆகிய​வற்​றின் அரு​கில் சிலைகள் நிறு​வப்​படு​வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்​ளிட்ட 11 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.