பாரீஸ்,
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீனாவின் லியூ யி – சென் போ ஜோடியுடன் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை சீன ஜோடி கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லியு யி – சென் போ இணை இந்த ஆட்டத்தில் 21-19, 18-21 மற்றும் 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
தோல்வியடைந்த இந்திய ஜோடிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. உலக சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தோற்றாலும் வெண்கல பதக்கம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.