குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: செப்.8ல் தேஜகூ எம்.பிக்களுக்கு பிரதமர் இரவு உணவு விருந்து!

புதுடெல்லி: செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 8 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரவு உணவு வழங்கவுள்ளார்.

இதுகுறித்து தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்களின்படி, ‘ குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு முந்தைய நாள், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு உணவு வழங்குவார். கூட்டணிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், பிணைப்புகளை வளர்ப்பதிலும் இத்தகைய தொடர்புகள் எப்போதும் பலனளித்துள்ளன.

எங்கள் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அனைத்து தேஜகூ கூட்டாளிகளின் முழு ஆதரவையும் பெற்றுள்ளார் என்ற போதிலும், வாக்களிப்பின் போது எம்.பி.க்களிடையே முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை உறுதிப்படுத்த இந்த இரவு உணவு உதவும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி தனது வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தெலங்கானாவைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளன.

பலம் என்ன? – செப்​டம்​பர் 9-ம் தேதி நடை​பெற​விருக்​கும் குடியரசு துணைத் தலைவர் தேர்​தலுக்​காக நாடாளு​மன்றம் சார்​பில் தரவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதன்​படி, குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் மொத்​தம் 782 எம்​பிக்​கள் வாக்​களிக்​கத் தகு​தி​யுடைய​வர்​கள். அவர்​களில் 542 பேர் மக்களவை​யிலும், 240 மாநிலங்​களவை​யிலும் உள்​ளனர்.

தேர்​தலில் வெற்றி பெற 392 எம்​பிக்​களின் வாக்​கு​கள் தேவைப்​படு​கின்​றன. மக்​களவை​யில் மத்​திய அரசுக்கு ஆதர​வாக 293 எம்பிக்களும், 134 எம்​பிக்​கள் மாநிலங்​களவை​யிலும் உள்​ளனர். இவை மொத்​தம் சேர்த்து மத்​திய அரசிற்கு 427 எம்​பிக்​களின் ஆதரவு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. எதிர்க்​கட்சி எம்​பிக்​களில் 249 பேர் மக்​களவை​யிலும், 106 பேர் மாநிலங்​களவை​யிலும் என மொத்​தம் 355 பேர் உள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.