ஜம்முவின் தாவி ஆற்றின் மீது 12 மணி நேரத்தில் பாலம்: இந்திய ராணுவம் அசத்தல்

ஜம்மு: ஜம்​மு​வில் சமீபத்​தில் ஏற்​பட்ட கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு போக்​கு​வரத்​துக்கு உயிர்​நாடி​யான தாவி பாலம் எண் 4-ன் கிழக்​குப் பகு​தியை கடுமை​யாக சேதப்​படுத்​தி​யது. இதனை பழுது​பார்ப்​ப​தற்கு அதிக நேரம் எடுக்​கும் என்​ப​தால், 110 அடி பெய்லி (தற்​காலிக) பாலத்தை ராணுவத்​தின் புலிகள் பிரி​வின் பொறி​யாளர்​கள் சவாலான சூழ்​நிலை​யில் 12 மணி நேரத்​தில் அமைத்​தனர்.

ஆகஸ்ட் 26 முதல் ராணுவத்​தின் ரைசிங் ஸ்டார் குழு​வினர் இந்​திய விமானப்​படைக்கு சொந்​த​மான ஹெலி​காப்​டர்​கள் உதவியுடன் பாதக​மான வானிலை நில​வரங்​களில் இருந்து குழந்​தைகள், பெண்​கள் என பலரை மீட்​டனர். சுமார் 1,000 பேர் அபா​யத்​திலிருந்து மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

மாற்று ஆப்​டிகல் பைபர் கேபிள்​கள் பதிக்​கப்​பட்​டதன் மூலம் ஜம்​மு-நகருக்கு இடையே​யான முக்​கிய​மான தகவல் தொடர்புகள் மீட்​டெடுக்​கப்​பட்​டன. மேலும், பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு மருத்​துவ உதவி, உணவு, நிவாரணப்​பொருட்​களும் வழங்​கப்​பட்​டு
உள்​ளன. இத்தகவலை மேஜர் ஜெனரல் முகேஷ் பன்​வாலா தெரி​வித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.