கழிவறை பிரச்னையால் பாட்டில்களில் சிறுநீர் கழித்த பயணிகள்; பறக்கும் விமானத்தில் என்ன நடந்தது?

விர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானத்தில் பயணிகள் சிறுநீரைக் கழிக்க பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாலியில் உள்ள டென்பசார் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்ற விமானத்தில்தான் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்று பராமரிப்பு பிரச்னை காரணமாகப் புறப்படும் முன்பே அதன் பயன்பாட்டை இழந்திருக்கிறது. மீதமுள்ள கழிப்பறைகளும் ஆறு மணி நேரப் பயணத்திற்குள் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமானத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

விமானம்
விமானம்

விமான கழிப்பறையை அணுக முடியாமல் தவித்த பயணிகள் சிறுநீரைக் கழிக்க பாட்டில்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தி ஆஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் அந்த விமானத்தில் பயணிகள் அசௌகரியமான சூழலை எதிர்கொண்டுள்ளனர். சிறுநீர் நாற்றம் தாங்க முடியாமல் பலரும் தவிர்த்து உள்ளனர்.

இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் நிலைமையே சமாளித்த குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதாகவும் விமான நிறுவனம் உறுதி அளித்துள்ளது..

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.