சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

புதுடெல்லி: மத்​திய ஊழல் தடுப்பு ஆணை​யம் சமீபத்​தில் வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சிபிஐ விசா​ரித்த 7,000-க்​கும் மேற்​பட்ட ஊழல் வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றில் 379 வழக்​கு​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன.

கடந்​தாண்டு இறு​திவரை உள்ள மொத்த வழக்​கு​களில் 1,506 வழக்​கு​கள் 3 ஆண்​டு​களாக​வும், 791 வழக்​கு​கள் 3 முதல் 5 ஆண்​டு​களாக​வும், 2,115 வழக்​கு​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 2,660 வழக்​கு​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும் நிலு​வை​யில் உள்​ளன.

இவை தவிர குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் மற்​றும் சிபிஐ தாக்​கல் செய்த 13,100 மேல் முறை​யீட்டு மனுக்​களும் பல உயர் நீதி​மன்​றங்​கள் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளன.

இவற்​றில் 666 மனுக்​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 1,227 மனுக்​கள் 15 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 2,989 மனுக்​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 4,059 மனுக்​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 1,778 மனுக்​கள் 2 ஆண்டு முதல் 5 ஆண்​டு​கள் வரை​யும், 2,441 மனுக்​கள் 2 ஆண்​டு​களுக்கு குறை​வாக​வும் நிலு​வை​யில் உள்​ளன.

கடந்த 2024-ம் ஆண்​டில் 644 வழக்​கு​களில் தீர்ப்​பு​கள் பெறப்​பட்​டன. இவற்​றில் 392 வழக்​கு​களில் தண்​டனை கிடைத்​தது. 154 வழக்​கு​களில் குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் விடுவிக்​கப்​பட்​டனர். கடந்​தாண்​டில் தண்​டனை வீதம் 69.14 சதவீத​மாக​ இருந்​தது.

கடந்​தாண்டு இறுதி வரை ஊழல் அல்​லாத வழக்​கு​கள் உட்பட 11,384 வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. கடந்​தாண்டு 807 வழக்​கு​களை சிபிஐ பதிவு செய்​தது. கடந்​தாண்​டில் 1,005 வழக்​கு​களின் விசா​ரணை​களை சிபிஐ முடித்​தது. கடந்​தாண்டு இறுதி வரை சிபிஐ பதிவு செய்த 529 ஊழல் வழக்​கு​களின் விசா​ரணை​கள் நிலு​வை​யில் உள்​ளன. வழக்​குப்​ப​திவு செய்த ஓராண்​டுக்​குள் சிபிஐ விசா​ரணையை முடிக்க வேண்​டும். ஆனால், சில வழக்​கு​களில் தாமதங்​கள் ஏற்​படு​கின்​றன. இவ்​வாறு சிபிஐ அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.