ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடரும்: உ.பி. சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கிவைத்து பிரதமர் மோடி அறிவிப்பு

நொய்டா: சரக்கு மற்​றும் சேவை வரி​யில் (ஜிஎஸ்​டி) சீர்​திருத்​தங்​கள் மேலும் தொடரும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உத்தர பிரதேச சர்​வ​தேச வர்த்தக கண்​காட்சி 2025-ஐ நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி கூறிய​தாவது: மக்​களின் சுமையை குறைக்​கும் வித​மாக மத்​திய அரசு வரி​களை கணிச​மாக குறைத்​துள்​ளது. பணவீக்​கத்தை கட்​டுப்​படுத்​தி​யுள்​ளது. இதனால், மக்​களின் வரு​மானம் மற்​றும் சேமிப்பு இரண்​டும் அதி​கரித்​துள்​ளது.

ரூ.12 லட்​சம் வரை வரு​மான வரி விலக்கு அளிப்​ப​தன் மூல​மும், புதிய ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​களை செயல்​படுத்​தி​யதன் மூல​மும் மக்​கள் இந்த ஆண்டு மட்​டும் ரூ.2.5 லட்​சம் கோடியை சேமிக்க வழி ஏற்​பட்​டுள்​ளது. அதேபோன்​று, கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்​டியை அமல்​படுத்​தியதன் மூலம் மறை​முக வரி விதிப்​பில் சீர்​திருத்​தங்​களை அரசு அறி​முகப்​படுத்​தி​யது.

இது, பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்​து​வதற்​கான ஒரு குறிப்​பிடத்​தக்க படிநிலை​யாகும். அதைத் தொடர்ந்து இந்த செப்​டம்​பரில் மேலும் சீர்​திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. குடிமக்​களின் ஆசீர்​வாதத்​துடன் ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் தொடரும். பொருளா​தா​ரம் மேலும் வலுப்​பெறும்​போது குடிமக்​கள் மீதான வரிச்​சுமை இன்​னும் கணிச​மாக குறை​யும்.

ஏழைகள், நடுத்தர வர்க்​கத்​தினர் என அனை​வரும் அதிக சேமிப்​பு​களால் (ஐடி சலுகைகள் மற்​றும் ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் காரண​மாக) பயனடைந்​துள்​ளனர். இருந்த போதி​லும், சில அரசி​யல் கட்​சிகள் மக்​களை குழப்ப முயற்​சிக்​கின்​றன. 2014-க்கு முந்​தைய தங்​களின் தோல்வி​களை மறைக்க காங்​கிரஸும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளும் மக்​களிடம் பொய் சொல்​கின்​றன.

உண்மை என்​னவென்​றால், காங்​கிரஸ் தலை​மையி​லான ஆட்​சி​யின்​போது ‘வரி கொள்​ளை’ நடந்​தது. நாட்​டின் சாதாரண குடிமக்​கள் அதிக வரி​களால் பாதிக்​கப்​பட்​டனர். எங்​களின் அரசு வரிச்​சுமையை பெரு​மள​வில் குறைத்து பணவீக்​கத்​தைக் கட்​டுக்​குள் கொண்டு வந்​துள்​ளது. 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி இந்​தியா வேக​மாக முன்​னேறி வரு​கிறது.

சர்​வ​தேச அளவி​லான சவால்​களுக்கு மத்​தி​யில் வரும் தசாப்​தங்​களுக்கு தேவை​யான ஒரு வலு​வான அடித்​தளத்தை இந்​தியா அமைத்து வரு​கிறது. உலகில் ஒரு நாடு மற்​றவர்​களை எவ்​வளவு அதி​க​மாக சார்ந்து இருக்​கிறதோ அவ்​வளவு அதி​க​மாக அதன் வளர்ச்சி சமரசம் செய்​யப்​படு​கிறது. இதனை உணர்ந்தே தற்​சார்பு திட்​டங்​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் கொடுக்​கப்​பட்டு வரு​கிறது. ஒவ்​வொரு இந்​தி​யரும் தற்​போது சுதேசி​யுடன் இணைக்​கப்​பட்​டுள்​ளனர். மக்​களும், வியா​பாரி​களும் உள்​ளூர் பொருட்​களை வாங்க, விற்க விரும்​பு​கின்​றனர்.

ரஷ்​யா​வுடன் ஒத்​துழைப்பு: எனது தலை​மையி​லான ஆட்​சிக் காலத்​தில் ரஷ்​யா​வுட​னான கூட்​டாண்​மையை இந்​தியா மேலும் வலுப்​படுத்தி வரு​கிறது. ஏகே-203 ரைபிள்​கள் மற்​றும் பிரம்​மோஸ் ஏவு​கணை தயாரிப்​ப​தில் ரஷ்​யா​வுட​னான ஒத்​துழைப்பு அதி​கரித்​துள்​ளது. இவ்​வாறு பிரதமர் தெரி​வித்​தார்.

பெண்​களுக்கு ரூ.10,000: விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் ‘முக்​கியமந்​திரி மகிளா ரோஜ்கர் யோஜ​னா’ திட்​டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்​கிறார். இதன் மூலம், மாநிலம் முழு​வதும் உள்ள 75 லட்​சம் பெண்​களின் வங்கி கணக்​கு​களில் தலா ரூ.10,000 செலுத்​தப்பட உள்​ளது.

இதற்​காக மொத்​தம் ரூ.7,500 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தத் திட்​டம் பெண்​களை ‘ஆத்​மநிர்​பார்’ (சுய​சார்​பு) ஆக்​கு​வதை​யும், சுயதொழில் மற்​றும் வாழ்​வா​தார வாய்ப்​பு​கள் மூலம் அதி​காரமளிப்​பதை ஊக்​கு​விப்​ப​தை​யும் முக்​கிய நோக்​க​மாகக்​ கொண்​டுள்​ளது என்​று அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.