பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 – புதிய திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பேசியது என்ன?

புதுடெல்லி: பிஹாரில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்போது 75 லட்​சம் பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுத​வியை அவர் வழங்​கி​னார். பிஹாரில் முதல்​வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​டணி அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநில அரசு சார்​பில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் அண்​மை​யில் அறிவிக்​கப்​பட்​டது.

இதன்​படி பிஹாரில் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் தலா ஒரு பெண்​ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்​படும். இந்த திட்​டத்​தில் இணைந்து சாதனை படைக்​கும் பெண்​களுக்கு கூடு​தலாக ரூ.2 லட்​சம் வரை நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று முதல்​வர் நிதிஷ் குமார் உறுதி அளித்து உள்​ளார்.

இந்தச் சூழலில் பிஹார் அரசின் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக தொடங்​கி​வைத்​தார். அப்​போது மாநிலம் முழு​வதும் 75 லட்​சம் பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுதவி அவர​வர் வங்​கிக் கணக்​கு​களில் செலுத்​தப்​பட்​டது.

ஒட்​டுமொத்​த​மாக ரூ.7,500 கோடி வழங்​கப்​பட்​டது. விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி மிக முக்​கிய​மான திட்​டத்தை தொடங்கி உள்​ளது. இதன்​மூலம் பிஹார் பெண்​களின் கனவு​கள், நனவாகும். மத்​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்ற பிறகு மக்​களின் வங்​கிக் கணக்​கு​களில் நேரடியாக நிதி​யுதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இப்​போது ஒரு பைசாவை​கூட இடைத்​தரகர்​களால் பறிக்க முடி​யாது.

பிஹார் மக்​களின் முன்​னேற்​றத்​துக்​காக நானும் முதல்​வர் நிதிஷும் அயராது பாடு​பட்டு வரு​கிறோம். தற்​போது தொடங்​கப்​பட்டு இருக்​கும் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்​தின் மூலம் ஏராள​மான பெண்​கள் மளிகை கடைகள், பாத்​திரக் கடை, அழகு சாதனப் பொருட்​கள் கடைகள், பொம்மை கடைகள் உட்பட பல்​வேறு சிறிய வணிக நிறு​வனங்​களை தொடங்க உள்​ளனர். சிலர் கறவை மாடு​கள், மீன் வளர்ப்​பு, ஆடு​கள் வளர்ப்பு உள்​ளிட்ட தொழில்​களில் கால் பதிக்க உள்​ளனர்.

மத்​திய அரசு சார்​பில் கிராமங்​களில் 3 கோடி லட்​சா​திபதி பெண்​களை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது. இதில் 2 கோடி பெண்​கள் லட்​சா​திப​தி​களாகி விட்​டனர். இந்த திட்​டத்​தில் பிஹாரை சேர்ந்த லட்​சக்​கணக்​காண பெண்​கள் பயன் பெற்றுள்ளனர்.

மேலும் முத்ரா தொழில் கடன் உட்பட பல்​வேறு வகை​யான கடன்​கள் பெண்​களுக்கு வழங்​கப்​படு​கிறது. ஒரு காலத்​தில் ராஷ்டிரிய ஜனதா தளம் பிஹாரில் ஆட்சி நடத்​தி​யது. அப்​போது அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி இருந்​தது. மாநிலம் முழுவதும் காட்​டாட்சி நடை​பெற்​றது.

தற்​போது தேசிய ஜனநாயக கூட்​டணி அரசில் பிஹார் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்​துகிறேன். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார். விழா​வின்​போது திட்ட பயனாளி​களு​டன் அவர் காணொலி வாயி​லாக கலந்​துரை​யாடி​னார்​.

40% பெண்களுக்கு நிதியுதவி: பிஹாரில் மொத்​தம் 3.41 கோடி பெண் வாக்​காளர்​கள் உள்​ளனர். இதில் முதல்​கட்​ட​மாக 75 லட்​சம் பெண்​களுக்கு முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்​தில் தலா ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்​பட்டு உள்​ளது. அடுத்த சில வாரங்​களில் திட்​டம் விரிவுபடுத்​தப்பட உள்​ளது. அப்​போது மேலும் பல லட்​சம் பெண்​கள் திட்​டத்​தில் இணைக்​கப்பட உள்​ளனர்.

ஒட்​டுமொத்​த​மாக பிஹார் பெண் வாக்​காளர்​களில் சுமார் 40 சதவீத பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்பட உள்ளது. வரும் நவம்​பரில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு சாதக​மாக அமையக்​கூடும் என்று அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.