நீதிமன்றம் முன்கூட்டியே அறிவுறுத்தியும் கரூரில் நடந்த துயரம்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?

சென்னை: கரூரில் நேற்று முன்​தினம் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரம் செய்​த​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 40 பேர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். எவரும் எதிர்​பா​ராத இந்த துயர சம்​பவம் ஒட்​டுமொத்த தமிழகத்​தையே சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது.

கடந்த செப். 14 முதல் மாவட்ட வாரி​யான பிரச்​சா​ரத்தை திருச்​சி​யில் தொடங்​கிய விஜய், தஞ்​சாவூர், நாகை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் சனிக்​கிழமை​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அவரைக் காண ரசிகர்​கள், தொண்​டர்​கள் மிக அதிக அளவில் திரண்​ட​தால், அவர்​களைக் கட்​டுப்​படுத்​து​வது காவல் துறைக்கு சவாலாக இருந்​தது. மேலும், பல இடங்​களி​லும் பொதுச் சொத்​துகள் சேதமடைந்​தன.

அதே​போல, தொண்​டர்​கள், ரசிகர்​கள் சிலர் உயர​மான இடங்​களி​லும், மின்​சார டிரான்​ஸ்​பார்​மர்​கள் மற்​றும் மரங்​களி​லும் ஆபத்​தான முறை​யில் நிற்​பது, விஜய் பிரச்​சார வாக​னத்தை பைக்​கு​களில் பின்​தொடர்​வது என ஆபத்தை உணராமல் செயல்​பட்​டனர். இதனால் தவெக பிரச்​சா​ரங்​களுக்கு காவல் துறை பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதித்​தது. இதை எதிர்த்து தவெக துணைப் பொதுச் செய​லா​ளர் சி.டி.ஆர். நிர்​மல்​கு​மார் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நீதிபதி என்​.சதீஷ்கு​மார் முன்​னிலை​யில் கடந்த செப். 18-ல் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி, ‘‘இது​போன்ற கூட்​டங்​களின்​போது போக்​கு​வரத்து நெருக்​கடி​யால் மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​படு​கின்​றனர். பொது சொத்​துகளும் சேதப்​படுத்​தப்​படு​கின்​றன. சாலைகள் முழு​மை​யாக முடக்​கப்​படு​கின்​றன. மக்​களின் பாது​காப்​பை​யும் உறு​தி​செய்ய வேண்​டியது போலீ​ஸாரின் கடமை. இது​போன்ற ஆபத்​தான இடங்​களில் ஏறி நிற்​கும்​போது அசம்​பா​விதம் நேரிட்​டால், அதற்கு யார் பொறுப்​பேற்​பது? நீங்​கள்​தான் கூட்​டத்​தை​யும், தொண்​டர்​களை​யும் கட்​டுப்​படுத்த வேண்​டும். பொது சொத்​துகளுக்கு சேதம் விளை​விப்​பவர்​களிட​மிருந்து உரிய இழப்​பீட்​டுத் தொகையை வசூலிக்க வேண்​டும். இல்​லை​யெனில் நீதி​மன்​றம் தலை​யிட நேரிடும்​’’என்று எச்​சரித்​தார்.

மேலும், “இது​போன்ற கூட்​டங்​கள், பேரணி​களுக்கு கர்ப்​பிணி​கள், மாற்​றுத் திற​னாளி​கள், குழந்​தைகள் வரு​வதை தவிர்க்க வேண்​டுமென, மற்​றவர்​களுக்கு முன்​மா​திரி​யாக விஜய் தெரிவிக்​கலாமே? மேலும், தனது தொண்​டர்​களும் ஒழுக்​கத்​துடன் நடந்​து​கொள்ள வேண்​டும் என அறி​வுறுத்​த​வும் வேண்​டும்’’ என்​றும் நீதிபதி அறி​வுறுத்​தி​னார்.

அதே​போல, ‘‘அனைத்து அரசி​யல் கட்​சிகளும் நடத்​தும் மாநாடு​கள், கூட்​டங்​களுக்கு குறிப்​பிட்ட எண்​ணிக்​கை​யில் தொண்​டர்​கள் வரவேண்​டும். பொது சொத்​துகளுக்கு சேதம் விளைவிக்​கக் கூடாது உள்​ளிட்ட நிபந்​தனை​களை விதித்​து, தமிழக அரசு வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்க வேண்​டும்.
அரசி​யல் கட்​சி​யினருக்​கிடையே பாரபட்​சம் காட்​டக்​கூ​டாது. பொது சொத்​துகள் அல்​லது மக்​களின் தனிப்​பட்ட உடமை​கள் சேதப்​படுத்​தப்​பட்​டால், அதற்​கான இழப்​பீட்​டுத் தொகையை சம்​பந்​தப்​பட்ட கட்​சிகளிட​மிருந்து வசூலிக்க வேண்​டும்’’ என்​றும் உத்​தர​விட்​டார்.

உயர் நீதி​மன்​றத்​தின் அறி​வுறுத்​தலை தொடர்ந்​து, கர்ப்​பிணிகள், கைக்​குழந்​தை​யுடன் இருக்​கும் சகோ​தரி​கள், முதி​ய​வர்​கள், உடல்​நலம் குன்​றியோர், பள்​ளிச் சிறு​வர், சிறுமியர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் ஆகியோர், விஜய் மக்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சிகளில் நேரில் கலந்​து​கொள்​வதை தவிர்க்​கு​மாறு தவெக பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் செப். 19-ம் தேதி அறிக்கை வெளி​யிட்​டார்.

உயர் நீதி​மன்​றம் மற்​றும் கட்​சித் தரப்​பில் அறி​வுறுத்​தி​யும், கரூரில் தவெக நடத்​திய பிரச்​சா​ரத்​தில் கர்ப்​பிணி​கள், குழந்​தைகள், முதி​யோர் ஏராள​மானோர் பங்​கேற்​றனர். எதிர்​பா​ராத வகை​யில் நடந்த விபத்​தில் குழந்​தைகள், கர்ப்​பிணி​கள் உள்​ளிட்ட 40 பேர் உயி​ரிழந்​தனர். இவ்​வளவு கட்​டுப்​பாடு​கள் விதித்​தும் இந்த துயரச் சம்​பவம் நிகழ்ந்​துள்​ள​தால், இனி எந்த அரசி​யல் கட்​சிக்​கும் ‘ரோடு ஷோ’ போன்ற பிரச்​சா​ரங்​களுக்கு கண்​டிப்​பாக அனு​மதி வழங்​கக் கூடாது.

அரசி​யல் கட்​சிகள் பொதுக் கூட்​டங்​கள் மூல​மாக மட்​டுமே பிரச்​சா​ரம் மேற்​கொள்ள அனு​மதி வழங்க வேண்​டும். சா​மானியர்​களின் உயிரைப் பணயம் வைக்​கும் விஷப் பரிட்​சையை மீண்​டும் முயற்​சிக்​க வேண்​டாம்​ என்​ப​தே பொது​மக்​களின்​ எதிர்​பார்​ப்​பாக உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.