பதாகை வைத்ததால் சர்ச்சை: முஸ்லிம் மதத்தலைவர் கைது – 1,700 பேர் மீது வழக்குகள் பதிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் மிலாது நபி பண்​டிகையை முன்​னிட்​டு, இம்​மாத தொடக்​கத்​தில் ‘ஐ லவ் முஹமது’ என்ற பெயரில் பதாகை வைக்​கப்​பட்​ட​தால் சர்ச்சை எழுந்​தது. இதுதொடர்​பாக உ.பி. போலீ​ஸார், வழக்​குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்​கையை (எப்​ஐஆர்) பதிவு செய்​தனர்.

இதைக் கண்​டித்து முஸ்​லிம்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதற்கு பதிலாக இந்து அமைப்​பினர் ‘ஐ லவ் மகாதேவ்’ பதாகைகளை ஏந்தி ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். உத்தர பிரதேச மாநிலம் பரேலி​யில் நேற்று முன்​தினம் வெள்​ளிக்​கிழமை பேரணி நடை​பெற்​றது.

இந்தப் பேரணி​யில் சிலர் போலீ​ஸார் மீது கற்​களை வீசி​ய​தால் வன்​முறை ஏற்​பட்​டது. இந்தப் பேரணி​யில் வந்​தவர்​களைக் கலைக்க போலீ​ஸார் தடியடி நடத்​தினர். இதில் ஏற்​பட்ட மோதலில் 10 போலீ​ஸார் காயமடைந்​தனர். இதுதொடர்​பாக இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் 1,700 பேர் மீது வழக்​கு​களை போலீ​ஸார் பதிவு செய்​துள்​ளனர். இந்​நிலை​யில் போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்த முஸ்​லிம் மதத்​தலை​வரும், இத்​தேஹாத்​-இ-மில்​லத் கவுன்​சில் தலை​வரு​மான தவு​கிர் ராசாவை நேற்று போலீ​ஸார் கைது செய்​தனர்.

‘ஐ லவ் முஹ​மது’ பிரச்​சா​ரத்தை ஆதரித்து அவர் செய்த வீடியோ அழைப்​புக்​குப் பிறகே நிலைமை பதற்​ற​மான​தாக போலீஸ்​ அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.