சென்னை: “சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் துயரம் தொடர்பாக அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கரூரில் நடந்திருப்பது பெருந்துயரம். கனத்த இதயத்துடனும் பெருந்துயருடனும்தான் இன்னும் இருக்கிறேன். தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விட்ட பிறகு எல்லா உத்தரவை பிறப்பித்த […]
