திருமலை மாட வீதிகளில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆய்வு

திருமலை: ​திரு​மலை​யில் உள்ள மாட வீதி​களில் நேற்று பிற்​பகல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் ஆய்வு மேற்​கொண்​டார். அங்​குள்ள பக்​தர்​களிடம், அன்​னபிர​சாதம், குடிநீர் போன்​றவை சரிவர வழங்​கப்​படு​கிற​தா? முதல் உதவி சிகிச்​சைகள் உடனுக்​குடன் கிடைக்​கிற​தா? குழந்​தைகளுக்கு பால் வழங்​கப்​படு​கிற​தா? உள்​ளிட்ட பல கேள்வி​களை பக்தர்கள் மற்​றும் அங்​கிருந்த ஸ்ரீ​வாரி சேவகர்​களிடம் அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் கேட்​டறிந்​தார்.

கருட சேவைக்கு திரு​மலைக்கு நிமிடத்​துக்கு ஒரு பேருந்து வீதம் திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு இயக்​கப்​பட்​டன. பைக்​கு​கள் அலிபிரி​யில் நிறுத்​தப்​படு​கின்​றன. வாகன சோதனை​கள் உடனுக்​குடன் நடத்​தப்​பட்டு திரு​மலைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

மாட வீதி​களில் காத்​திருக்​கும் பக்​தர்​கள், தரிசனத்தை முடித்த பின்​னர், அவர்​கள் வெளி​யில் அனுப்பி வைக்​கப்​பட்​டு, வெளி​யில் காத்​திருக்​கும் பக்​தர்​கள் 45 நிமிடத்​துக்கு ஒரு​முறை மாட​வீ​தி​களுக்​குள் அனு​ம​திக்​கப்​பட்​டனர். 6 ஆயிரம் கேம​ராக்​கள் மூலம் பாது​காப்பு ஏற்​பாடு​கள் கண்​காணிக்​கப்​பட்​டன. போலீ​ஸார், தேவஸ்​தான விஜிலென்ஸ் ஊழியர்​கள், ஆக்​டோபஸ் கமாண்டோ வீரர்​கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பாது​காப்​பு பணி​களில்​ ஈடு​பட்​டனர்​

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.