விழுப்புரம்: `கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியும், போலீஸும்தான் காரணம்!’ – தவெக நிர்வாகி தற்கொலை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட விற்பட்டு கிராமத்தின் த.வெ.க செயலாளராக இருந்த ஐயப்பன், இன்று மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய ஐயப்பனை மீட்ட உறவினர்கள், அவரை மருத்துமனைக்கு தூக்கிச் சென்றனர். … Read more