ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அண்டர்-19 கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகளைக் 3-0 என்ற கணக்கில் பலமாக வென்று கோலாகலமான தொடக்கத்தை செய்துள்ளது. அடுத்து நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த தொடர் செப்டம்பர் 30-ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள இயன் ஹீலி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
Add Zee News as a Preferred Source
243க்கு ஆல் அவுட்
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அண்டர்-19 அணி சிறப்பாக பந்து வீசி அவர்களை 243 ரன்களில் ஆல் அவுட்டாக்கியது. அதில் ஸ்டீவன் ஹோகன் 92 மற்றும் ஜெட் ஹோலிக் 38 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி பந்து வீச்சாளர்களில் தீபேஷ் திவ்வேந்திரன் 5 மற்றும் கிசான் குமார் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, சிறப்பாக விளையாடியது. கேப்டன் ஆயுஸ் மாத்ரே 21 ரன்களிலும் விகான் மல்கோத்ரா 2 ரன்களிலும் அவுட்டானார். ஆனால் வைபவ் சூrயவன்சி அதிரடியான ஆட்டத்தை ஆடினார். 113 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். உயர்நிலை வீரர் வேதாந்தா திரிவேதியும் நிதானமான ஆட்டம் நிகழ்த்தி 140 ரன்களின் சுற்றிலும் அரிதான ஆட்டத்தைக் காட்டினார். இவர்கள் இணைந்த 3வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தியது.
அசத்திய இந்தியா
இந்திய அணி மொத்தமாக 428 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை விட 185 ரன்கள் முன்னிலையில் வகித்தது. ஆஸ்திரேலியாவுக்கு ஹைடன் ஸ்கிலர் மற்றும் கேப்டன் வில் மலஜ்ஜூக் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்த நிலையில், வீரர் சூர்யவன்சி சாதனை படைத்துள்ளார். இவர் 78 பந்துகளில் அடித்த இந்த வேகமான சதம், அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் அடைந்த மிக வேகமான சாதனையாக இருக்கிறது. இதற்கு முன் 2023-ல் லியாம் ப்ளாக்போர்ட் இதே வகையில் 124 பந்துகளில் அடித்து சாதனை படைத்திருந்தார். மேலும், 14 வயது 188 நாட்கள் வயதில் அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த இந்திய வீரராகவும் சூரியவன்சி பெயர் பதிக்கப்பட்டுள்ளார். அவர் நியூஸிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் வைத்த ரிக்கார்ட்டையும் சமமாக்கியுள்ளார், அதாவது இரண்டு முறை 100 பந்துகளுக்குள் சதம் அடைத்த சாதனையை படைத்துள்ளார்.
About the Author
R Balaji