குரு நானக் ஜெயந்தி வழிபாடு: சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்ல அனுமதி

புதுடெல்லி: குரு நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சீக்​கிய பக்​தர்​கள் பாகிஸ்​தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்​திய அரசு அனுமதி அளித்​துள்​ளது.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சீக்​கிய மதத்தை நிறு​விய குரு நானக் தேவின் பிறந்த நாளை​யொட்டி சீக்​கிய பக்​தர்​கள் பாகிஸ்​தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்​திய அரசு அனு​மதி அளித்​துள்​ளது. என்​றாலும் இந்த அனு​ம​தி, தேர்வு செய்யப்​பட்ட குழுக்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். தகுதி வாய்ந்த பக்​தர்​களை பஞ்​சாப் மாநில அரசு பரிந்​துரை செய்​யும். மத்​திய உள்​துறை அமைச்​சகம் இதற்கு அனு​மதி வழங்​கும்.

குரு நானக் தேவ் பிறந்த இடமான நன்​கானா சாகிப்​பில் உள்ள குருத்​வா​ரா, குரு நானக் தனது கடைசிக் காலத்தை கழித்த கர்​தார்​பூர் தர்​பார் சாகிப் குருத்​வாரா உள்​ளிட்ட புனிதத் தலங்​களுக்கு அட்​டாரி – வாகா எல்லை வழி​யாக இவர்​கள் பயணம் செய்​ய​லாம்.

இந்​தக் குழுக்​களுக்கு ஷிரோமணி குருத்​வாரா பிரபந்த கமிட்​டி, பாகிஸ்​தானின் எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரி​யம் ஆகியவை உதவி​களை செய்​யும். மத வழி​பாட்​டுத் தல பயணங்​களுக்​கான 1974-ம் ஆண்டு இருதரப்பு உடன்​பாட்​டின் கீழ் இந்த யாத்​திரை நடத்​தப்​படும். இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.