வெஸ்ட் இண்டீஸை பந்தாடிய இந்தியா.. 2007க்கு பின் மாபெரும் சாதனை! என்ன தெரியுமா?

ஆசிய கோப்பை தொடரை முடித்த கையோடு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (அக்டோபர் 02) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வென்ஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

Add Zee News as a Preferred Source

அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை வெஸ்ட் இண்டீஸ் அணியால் எதிர்கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் அந்த அணி 162 ரன்களை மட்டுமே சேர்ந்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்கத்தில் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சாய் சுதர்சன் 7 ரன்னில் வெளியேறினார். மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் அரை சதம் விளாசினார். அவருடன் விளையாடிய கேப்டன் கில் அரைசதம் அடித்து அவுட்டானார். 

மூன்று பேர் சதம் 

மறுபுறம் நெர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 2016க்கு பின்னர் சொந்த மண்ணில் அதாவது இந்தியாவில் டெஸ்ட்டில் சதம் அடித்தார். பின்னர் விக்கெட்டையும் இழந்து வெளியேறினார். இதையடுத்து துருவ் ஜுரேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா களத்தில் நங்கூரமாக நின்றனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனை பயன்படுத்தி இந்த கூட்டணி 206 ரன்களை சேர்த்தது. இருவருமே சதம் அடித்தனர். 

இதில் துருவ் ஜுரேலுக்கு இது முதல் டெஸ்ட் சதம் ஆகும். அவர் 210 பந்துகள் எதிர்கொண்டு 125 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஜடேஜாவும் சதம் அடித்து தொடர்ந்து களத்தில் நிலைத்து வருகிறார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 448 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 286 ரன்கள் முன்னிலையில் உள்ளனர். 

2007க்கு பின் நடந்த நிகழ்வு 

இந்த போட்டியின் மூலம் 2007க்கு பின்னர் ஓர் அரிதான சாதனை நிகழ்ந்துள்ளது. அதாவது, ஒரு வருடத்தில் 3 முறை ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இந்தியா 3 சதங்கள் அடித்து அசத்தி உள்ளது. 1979, 1986, 2007க்கு பின்னர் 4வது முறையாக இந்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. இந்த வருடத்தில் முதலில் இங்கிலாந்து தொடரில் லீட்ஸ் முதல் போட்டியில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதம் அடித்தனர். இதையடுத்து அதே தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியில் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சதமடித்தார். தற்போது ராகுல், ஜுரேல் மற்றும் ஜடேஜா சதம் அடித்துள்ளனர்.  

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.