திருப்பதி ஊழியர்கள் பற்றி நிர்வாக அதிகாரி சிங்காலிடம் பக்தர்கள் புகார்

திருமலை: திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் நேற்​று ​முன்​தினம் பக்​தர்​களிடம் தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அணில்​கு​மார் தொலைபேசி மூலம் குறை​களை கேட்​டறி​யும் நிகழ்ச்சி நடந்​தது.

அப்​போது, 23 பக்​தர்​கள் வெவ்​வேறு பகு​தி​களில் இருந்து தொலைபேசி மூலம் தங்​களது குறை​​களை நிர்​வாக அதி​காரிக்கு எடுத்​துரைத்​தனர். அப்​போது கடப்​பா​விலிருந்து ஸ்ரீநி​வாசுலு எனும் பக்​தர் “ரூ.300 சிறப்பு தரிசன ஆன்​லைன் டிக்​கெட்​டு​களை மட்​டும் தனி​யாக ஒரு நாளில் வழங்​கப்பட வேண்​டும்” என கேட்​டுக்​கொண்​டார். இதுகுறித்து பரிசீலிக்​கப்​படும் என அதி​காரி தெரி​வித்​தார்.

திருப்​பூரில் இருந்து நாகேஸ்வர ராவ் எனும் பக்​தர் “கோயிலுக்​குள் சில தேவஸ்​தான ஊழியர்​கள் தரக்​குறை​வாக நடந்து கொள்​கின்​றனர். அவர்​கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என பேசி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.