புதுடெல்லி,
2025-ம் ஆண்டு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
மொத்தம் 186 பதக்கங்களுக்காக போட்டிகள் நடந்தன. இதில், சர்வதேச பாரா தடகள வீரர்கள், உலக சாம்பியன்கள் மற்றும் இந்திய விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், போட்டியை நடத்திய இந்தியா, 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் நாடுகளை தொடர்ந்து உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதற்கு முன் 2019-ம் ஆண்டு (துபாய்) நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 9 பதக்கங்களையும், 2023-ம் ஆண்டில் 10 பதக்கங்களையும், 2019-ம் ஆண்டில் 17 பதக்கங்களையும் இந்தியா வென்றிருந்தது.
இந்த ஆண்டு இவை எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி விட்டு 22 பதக்கங்களை வென்று இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடந்து முடிந்தது.