பிஹார் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு – இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் நோக்கில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.

பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 பிஹார் மாநில கட்சிகளுடன் கடந்த 4ம் தேதி ஆலோசனை நடத்தியது. பிஹார் தலைநகர் பாட்​னா​வில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்​டத்தில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து மற்​றும் மாநில தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, சிபிஎம், காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள், சிபிஐ(எம்எல்) விடுதலை, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகிய 6 மாநில கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டன.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் மாநில பாஜக தலை​வர் உமேஷ் குஷ்​வாகா கூறும்​போது, “பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை இரு கட்​டங்​களாக நடத்த வேண்​டும். புர்கா அணிந்து வரும் பெண்​களின் முக அடை​யாளத்தை உறுதி செய்ய வேண்​டும். மத்​திய பாது​காப்பு படைகளை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்த வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.

பாஜக​வின் கூட்​டணி கட்​சி​யான ஐக்​கிய ஜனதா தளத்​தின் மூத்த தலை​வர் சஞ்​சய் ஜா கூறும்​போது, “பிஹாரில் மாவோ​யிஸ்ட் தீவிர​வாத பிரச்​சினை கிடை​யாது. சட்​டம், ஒழுங்கு சீராக இருக்​கிறது. எனவே ஒரே கட்​ட​மாக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை நடத்த வேண்​டும்’’ என்று வலி​யுறுத்​தி​னார்.

பிஹார் மாநில காங்​கிரஸ் தலை​வர் ராஜேஷ் ராம் கூறும்​போது, “வாக்​காளர் இறுதிப் பட்​டியலில் புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் எத்​தனை பேர் நீக்​கப்​பட்டு உள்​ளனர்? புதி​தாக எத்​தனை பேர் சேர்க்​கப்​பட்டு உள்​ளனர்? எத்​தனை ஊடுரு​வல்​காரர்​கள் கண்​டறியப்​பட்​டனர் ஆகிய கேள்வி​களுக்கு தேர்​தல் ஆணை​யம் பதில் அளிக்க வேண்​டும். எங்​களுக்கு தேர்​தல் ஆணை​யம் உரிய பதில்​களை வழங்க வேண்​டும்’’ என்று கோரி​னார்.

ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் அபய் குஷ்​வாகா கூறும்​போது, “வாக்​குப்​ப​தி​வின்​போது தாழ்த்​தப்​பட்ட மக்​களுக்கு போதிய பாது​காப்பு வழங்க வேண்​டும். தேர்​தல் முறை​கேடு​களை தடுக்க வேண்​டும்’’ என்று கோரிக்கை விடுத்​தார்.

சுமார் 3 மணி நேரம் பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​கள் தங்​கள் கருத்​துகளை எடுத்​துரைத்​தனர். இறு​தி​யில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் கூறும்​போது, “அனைத்து கட்​சிகளின் கருத்​துகள் பரிசீலனை செய்​யப்​பட்டு உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்’’ என்று உறுதி அளித்​தார்.

பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், பாஜக 80, ஐக்கிய ஜனதா தளம் 45, ஹெச்ஏஎம்(எஸ்) 4, 2 சுயேட்சைகள் என தேசிய ஜனநாயகக் கூட்டணி 131 தொகுதிகளைக் கொண்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 77, காங்கிரஸ் 19, சிபிஐ(எம்எல்) 11, சிபிஐ(எம்) 2, சிபிஐ 2 என மகாகட்பந்தன் 111 தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்முறையும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாகட்பந்தனுக்கும் இடையேதான் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.