துப்புரவு தொழிலாளருக்கு ரூ.40 லட்சம் காப்பீடு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு 

புதுடெல்லி: உ.பி.​யில் ஒப்​பந்த துப்​புரவு தொழிலா​ளர்​களுக்கு ரூ.40 லட்​சம் விபத்து காப்​பீடு வழங்​கப்​படும் என அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அறி​வித்​துள்​ளார்.

உ.பி.​யில் துப்​புர​வுப் பணி​யில் பெரும்​பாலும் வால்​மீகி சமூகத்​தினர் ஈடு​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் தலைநகர் லக்​னோ​வில், பாபா சாகேப் டாக்​டர் பீம்​ராவ் அம்​பேத்​கர் மகாசபா அறக்​கட்​டளை சார்​பில் மகரிஷி வால்​மீகி பிரகத் திவஸ் நடை​பெற்​றது. இதில் முக்​கிய விருந்​தின​ராக முதல்​வர் யோகி பங்​கேற்று பேசி​ய​தாவது: வால்​மீகி பகவானை அவம​திப்​பது ராமரை அவம​திப்​பது போலாகும். இவர்​களை வைத்து எதிர்க்​கட்​சிகள் சாதி அரசி​யல் செய்​கின்​றன. இதிலிருந்து தப்​பிக்க வால்​மீகி சமூகத்​தினர் தங்​கள் குழந்​தைகளுக்கு கல்வி கற்​பிக்க வேண்​டும். வால்​மீகி சமூகத்​தினருக்கு அளிக்​கப்​படும் மரி​யாதை வால்​மீகி​யின் மரபுக்கு செய்​யும் மரி​யாதை ஆகும்.

உ.பி.​யில் ஒப்​பந்த துப்​புர​வுத் தொழிலா​ளர் துர​திருஷ்ட​வச​மாக விபத்​துக்​குள்​ளா​னால், அவரது குடும்​பத்​துக்கு ரூ.40 லட்​சம் வழங்​கும் வகை​யில் காப்​பீடு திட்​டம் செயல்​படுத்​தப்​படும். இந்த தொகை அவுட்​சோர்​சிங் நிறு​வனங்​கள் மூல​மாக அன்​றி, அரசு நிறு​வனம் மூலம் பெற்​றுத் தரப்​படும். சுமார் 80 ஆயிரம் பேருக்கு இந்​தக் காப்​பீடு வழங்​கப்​படும்.

ராமாயணத்​தி​லும் ராமர் தான் உண்​மை​யான மதம் என்று வால்​மீகி குறிப்​பிட்​டுள்​ளார். இதற்​காக, மனித சமூகம் பகவான் வால்​மீகிக்கு நன்றி தெரிவிக்​கிறது. ஒவ்​வொரு வீட்​டிலும் மகரிஷி வால்​மீகி​யின் படம் இருக்க வேண்​டும். ராமாயண காலத்​தில் மகரிஷி வால்​மீகி, மகா​பாரத காலத்​தில் மகரிஷி வேத வியாசர், இடைக்​காலத்​தில் சத்​குரு ரவி​தாஸ், சுதந்​திரப் போராட்​டத்​தின்​போது பாபா சாகேப் அம்​பேத்​கர் ஆகியோர் சமூகத்தை வழிநடத்​தினர்.

வாக்கு வங்கி என்ற பெயரில் சாதி​யின் உதவியை நாடு​கின்​றனர். 2012-ம் ஆண்டு சமாஜ்​வாதி கட்சி ஆட்​சிக்கு வந்​த​போது, சமூக நீதி​யின் முன்​னோடிகளின் நினை​வுச் சின்​னங்​கள் இடிக்​கப்​படும் அச்​சுறுத்​தல் எழுந்​தது. கன்​னோஜ் மருத்​து​வக் கல்​லூரி​யின் பெயரில் இருந்து ‘பாபா சாஹேப்’ நீக்​கப்​பட்​டது. லக்னோ மொழி பல்​கலைக்​கழகத்​திற்கு சூட்​டப்​பட்​டிருந்த கன்ஷி ராமின் பெயரும் சமாஜ்​வாதி கட்​சி​யால்​ மாற்​றப்​பட்​டது. இவ்​வாறு யோகி ஆதித்​ய​நாத்​ பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.