Virat Kohli & Rohit Sharma Retirement: இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் டி20 வடிவில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு செய்தனர். இதனால் இருவரும் இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவர்கள் இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட் வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளனர்.
Add Zee News as a Preferred Source
இந்த சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருவரும் தேர்வாகி உள்ளனர். ஆனால் இதுவரை ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அப்பதவில் இருந்து நீக்கிவிட்டு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்துள்ளனர். இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. இருவருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரே கடைசியாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேவேளையில் இத்தொடரில் இவர்களின் செயல்பாட்டை பொறுத்தே அவர்களின் எதிர்காலம் அமையப் போகிறது என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், ரோகித் சர்மா தொடக்க வீரராக சிறப்பாக விளையாட கூடியவர். விராட் கோலி ஒரு சேஸிங் மாஸ்டர். அவர்கள் இருவருக்குமே இன்னும் போதுமான திறமைகள் உள்ளது என நான் கருதுகின்றேன். அதனாலேயே அவர்கள் இருவரும் 2027 உலகக் கோப்பை வரை விளையாடி விட்டு அதன்பின் ஓய்வு பெறலாம் என நினைக்கிறேன்.
அவர்களுக்கு நிறைய அனுபவம் உள்ளன. அதனால் அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும். அவர்களாலும் அது முடியும். என்னை பொருத்தவரையில் அவர்கள் இருவருமே இளம் வீரர்கள் தங்களை தள்ளுவதை உணருவார்கள். எனவே அவர்கள் கடைசி கட்டத்தில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரியான ஃபார்ம் இல்லை, மகிழ்ச்சியின்றி விளையாடினால் அவர்கள் கண்டிப்பாக ஓய்வை அறிவிப்பார்கள். ஆனால் அவர்கள் இந்த ஆஸ்திரேலியா தொடருடன் ஓய்வு பெற மாட்டார்கள். இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.
About the Author
R Balaji