பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: 53 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

பாட்னா: வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக பிஹார் தேர்​தல் நடத்​தப்​படு​கிறது. இந்த தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் 101, லோக் ஜன சக்தி (ராம்வி​லாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 6 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன.

ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ், இடது​சா​ரி​கள் கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு இது​வரை இறுதி செய்​யப்​பட​வில்​லை. பிஹார் முதல் கட்ட தேர்​தலுக்​கான வேட்பு மனு தாக்​கல் கடந்த 17-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது.

மெகா கூட்​டணி சார்​பில் முதல் கட்ட தேர்​தலுக்​காக 125 வேட்​பாளர்​கள் மனு தாக்​கல் செய்​துள்​ளனர். இதன்​படி ஆர்​ஜேடி சார்​பில் 72 பேர், காங்​கிரஸ் சார்​பில் 24 பேர், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் சார்​பில் 21 பேர், விஐபி சார்​பில் 6, ஐஐபி சார்​பில் 2 பேர் மனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

காங்​கிரஸ் சார்​பில் கடந்த 16-ம் தேதி 48 வேட்​பாளர்​கள் அடங்​கிய பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்​தினம் 5 பேர் அடங்​கிய பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அந்த கட்சி சார்​பில் இது​வரை 53 வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட்டு உள்​ளனர். இரண்​டாம் கட்ட தேர்​தலுக்​கான வேட்பு மனு தாக்​கல் இன்​றுடன் நிறைவடைகிறது. ஆனால் மெகா கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீடு இது​வரை இழுபறி​யாகவே உள்ளது. மெகா கூட்​டணி சார்​பில் முதல்​வர் வேட்​பாள​ர் யார் என்பதிலும் காங்​கிரஸ் – ஆர்ஜேடி இடையே ​ குழப்​பம்​ நீடிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.