சுப்மான் கில் வேண்டவே வேண்டாம்… சொன்னவர் சூர்யகுமார் – ஏன் தெரியுமா?

India National Cricket Team: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணி கடைசி மூன்றாண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஐசிசி உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் இறுதிப்போட்டி வரை சாம்பியன்ஷிப்பை இந்தியா நூலிழையில் தவறவிட்டது.

Add Zee News as a Preferred Source

Team India: டெஸ்ட், ஓடிஐயில் இந்திய அணி

இருப்பினும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியது. இந்தச் சூழலில், டெஸ்டில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், புஜாரா ஆகியோர் ஓய்வு பெற்ற பின் இளம் இந்திய அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. 

சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் முழுமையாக வென்றிருக்கிறது. கடந்தாண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் வைட்வாஷ் ஆன பின் இந்திய அணி மீண்டும் சிறப்பான நிலைக்கு திரும்பி வருகிறது. இன்னும் சீனியர் வீரர்கள் இருப்பதாலும், 2027ஆம் ஆண்டில்தான் ஐசிசி உலகக் கோப்பை வருவதாலும் ஓடிஐ குறித்து தற்சமயம் யோசிக்க வேண்டியதில்லை.

Team India: இந்திய அணியின் அடுத்த டார்கெட்

தற்போது இந்திய அணி முதல் டார்கெட்டாக 2026ஆம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்தான். நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் டி20 உலகக் கோப்பையை தக்கவைக்கும் என அதிக எதிர்பார்க்க உள்ளது, அதற்கு முக்கிய காரணம் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க இருப்பதுதான். அந்த வகையில், சிறப்பான டி20 அணியை கட்டமைக்க இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் கௌதம் கம்பீர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

Team India: டி20ஐ அணியில் சுப்மான் கில்

சமீபத்தில் சூர்யகுமார் தலைமையில் இந்தியா ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றியது. ஆசிய கோப்பையில் வென்றிருந்தாலும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதில் முதல் கேள்வியே, டி20ஐ போட்டிகளில் ஓபனிங்கில் இறங்கி சஞ்சு சாம்சன் மிரட்டி வரும் சூழலில், சுப்மான் கில்லை அணிக்குள் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? என்பதுதான்…

Team India: சூர்யகுமார் யாதவ் எடுத்த முடிவு

சுப்மான் கில் வருகையால் சஞ்சு சாம்சனின் பிளேயிங் லெவன் இடம் பாதிக்கப்படவில்லை என்றாலும் அவரின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் வந்தது. தற்போது அவர் நம்பர் 5இல் களமிறங்கி வருகிறார். இப்படியிருக்க, நன்றாக போய்க்கொண்டிருந்த அணியில் பெரிய மாற்றமாக கில்லை கொண்டுவந்தது மட்டுமின்றி அவரை துணை கேப்டனாகவும் நியமித்ததை சொல்லலாம். இப்படியிருக்க, ஆசிய கோப்பை தொடரில் இந்திய ஸ்குவாடில் சுப்மான் கில் வேண்டாம் என்றே சூர்யகுமார் யாதவ் கூறியிருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. கில்லின் நிதான பேட்டிங் தற்போது இந்திய டி20ஐ அணியின் பேட்டிங் அப்ரோச்சிற்கு சரிபட்டு வராது என பேசியிருக்கிறார்.

Team India: கம்பீர், அகர்கர் எடுத்த முடிவு என்ன?

ஆனால், டி20ஐ போட்டிகளில் சுப்மான் கில்லின் தேவை குறித்து தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவினாலேயே கில் இந்திய டி20ஐ அணியில் சேர்க்கப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சுப்மான் கில் எதிர்கால டி20ஐ அணி கேப்டனாக்க வேண்டும் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். 

இவர்கள் எடுத்துள்ள இந்த முடிவு சரியா, தவறா என்பது அடுத்தடுத்து நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20ஐ தொடர்களில் ஏறத்தாழ உறுதியாகிவிடும். சுப்மான் கில் இந்த 15 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், விளையாடவிட்டாலும் அவரின் இடம் தற்போது உறுதியாகிவிட்டது. 

Team India: யார் முடிவு சரி?

சஞ்சு சாம்சனின் இடமும் தற்போது ஊசலாட்டத்தில்தான் இருக்கிறது. ஒருவேளை அவர் தொடர்ந்து சொதப்பும்பட்சத்தில் அவர் இடத்தில் ஜித்தேஷ் சர்மா விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் சஞ்சு சாம்சன் நீடித்த வாய்ப்பு கொடுக்கப்படும் என்றே தெரிகிறது. இந்தச் சூழலில், ஐசிசி டி20 உலகக் கோப்பையை தொடரில் இந்தியாவின் செயல்பாட்டில் நிச்சயம் கில்லும், சாம்சனும் பெரிய தாக்கத்தை செலுத்துவார்கள். இதில் கௌதம் கம்பீர், அகர்கர் முடிவு சரியானதா அல்லது சுப்மான் கில்லை சேர்த்தது தவறா என்பது உலகக் கோப்பையின் முடிவில் தெரியவரும். 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.